செய்திகள் :

Nobel Prize: இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் 3 அமெரிக்கர்கள்; என்ன கண்டுபிடிப்பு தெரியுமா?

post image

இயற்பியல் துறையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகிய மூன்று அறிவியலாளர்கள் வென்றுள்ளனர்.

மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் இயக்கவியல் குறித்த ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு
நோபல் பரிசு

"இந்தக் கண்டுபிடிப்பு குவாண்டம் கிரிப்டோகிராஃபி, குவாண்டம் கணினிகள் மற்றும் குவாண்டம் சென்சார்கள் உள்ளிட்ட குவாண்டம் தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்கும்" என விருதை வழங்கும் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி தெரிவித்துள்ளது.

இயற்பியலுக்காக விருது பெறும் மூவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு துறையிலும் நோபல் பரிசுக்கு 1.2 மில்லியன் டாலர் பரிசுத்தொகை ஒதுக்கப்படும். இது வெற்றியாளர்களுக்குச் சமமாகப் பிரித்தளிக்கப்படும்.

நேற்றைய தினம், உடலியல் அல்லது மருத்துவத்துக்கான பரிசு மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி
உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி

மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் எதை அழிக்க வேண்டும்/எதைக் காக்க வேண்டும் என்பதை எப்படித் தீர்மானிக்கின்றன என்பது குறித்த ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு:

உலகின் புகழ்பெற்ற விருதான நோபல் பரிசு அறிவியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், அமைதி, மனித நேயம் மற்றும் சமூக நலனுக்கான பங்களிப்பைக் கௌரவிக்கவும் 1901 முதல் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

டைனமைட்டைக் கண்டுபிடித்த ஆல்ஃபிரட் நோபல் என்ற ஸ்வீடிய தொழில்முனைவோரின் மறைவுக்குப் பிறகு அவரது விருப்பத்தின் பெயரில் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இயற்பியல்தான் நோபலில் சேர்க்கப்பட்ட முதல் பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

Planet Y: பூமிக்கும் புதனுக்கும் இடைப்பட்ட வெளியில் புது கிரகமா?- வானியலாளர்கள் வெளியிட்ட தகவல்!

சூரிய மண்டலத்தின் தொலைதூரப் பகுதியில் இதுவரை கண்டறியப்படாத ஒரு புதிய கிரகம் இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் புதிய ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த மர்மமான கிரகத்திற்கு 'பிளானட் Y' (Planet Y) என்ற... மேலும் பார்க்க

'இரும்பை உருக்கும் மந்திரக் கல்' - வைரலாகும் போலி வீடியோ - பின்னிருக்கும் அறிவியல் உண்மை என்ன?

ஆப்கானிஸ்தானில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் அரிய கருப்பு நிறக் கல் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த கல் கையில் தொடும்போது சாதாரணமாக குளுமையாக இருந்தாலும் அதில் இரும்பு, எஃகு பொருட்களை... மேலும் பார்க்க

"5 லிட்டர் தண்ணீரில் 6 மாதம் அடுப்பு எரியுமா?" - Prof T.V.Venkateswaran Interview

தண்ணீரை மூலப்பொருளாகக் கொண்டு எரியும் அடுப்பை திருப்பூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் கண்டு பிடித்துள்ளதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. தண்ணீரை மூலப்பொருளாகக் கொண்டு அடுப்பு எரிவதன் பின்னணியில் இருக... மேலும் பார்க்க

``உலகின் சிறந்த விஞ்ஞானிகள்'' - ஸ்டான்போர்ட் பல்கலை., பட்டியலில் ராமநாதபுரம் உதவிப் பேராசிரியர்!

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலை மற்றும் எல்ஸ்வேர் நிறுவனம் இணைந்து உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளின் பட்டியலைத் தேர்வு செய்து வெளியிட்டுள்ளது.இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட இந்த தரவரிசைப் பட்டிய... மேலும் பார்க்க

மனிதனால் 150 வயதுக்கு மேல் வாழ முடியுமா? - ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

மனிதர்களின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகள் வரை நீட்டிப்பது குறித்து ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர், சமீபத்தில் பேசியது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.இந்த உரையாடலில் உயிரி தொழில்நு... மேலும் பார்க்க

தினமும் 'ஒரு பீர்' அளவிலான ஆல்கஹாலை உட்கொள்ளும் சிம்பன்சிகள் - ஆய்வில் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்!

காடுகளில் வாழும் சிம்பன்சிகள், நன்கு பழுத்த பழங்களை உண்பதன் மூலம் தினமும் ஒரு பீர் பாட்டில் அளவுக்கு சமமான ஆல்கஹாலை உட்கொள்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு ஆல்கஹால் மீதுள்ள நாட்டம் எப்ப... மேலும் பார்க்க