செய்திகள் :

தினமும் 'ஒரு பீர்' அளவிலான ஆல்கஹாலை உட்கொள்ளும் சிம்பன்சிகள் - ஆய்வில் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்!

post image

காடுகளில் வாழும் சிம்பன்சிகள், நன்கு பழுத்த பழங்களை உண்பதன் மூலம் தினமும் ஒரு பீர் பாட்டில் அளவுக்கு சமமான ஆல்கஹாலை உட்கொள்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு ஆல்கஹால் மீதுள்ள நாட்டம் எப்படி உருவானது என்பது குறித்த பரிணாம ரீதியான விளக்கத்தையும் இந்த ஆய்வு வழங்குகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, உகாண்டா மற்றும் ஐவரி கோஸ்ட் காடுகளில் இந்த ஆய்வை நடத்தியது. அங்குள்ள சிம்பன்சிகள் விரும்பி உண்ணும் அத்திப்பழங்கள், பிளம்ஸ் போன்ற நன்கு பழுத்த, நொதித்த பழங்களில் உள்ள ஆல்கஹால் அளவை அவர்கள் அளவிட்டனர்.

Chimpanzees consume fruits it worth of alcohol

சிம்பன்சிகள் ஒரு நாளைக்கு சுமார் 10 பவுண்டுகள் (சுமார் 4.5 கிலோகிராம்) பழங்களை உண்கின்றன. இதன் மூலம், அவை தினசரி சராசரியாக 14 கிராம் எத்தனால் (ஆல்கஹால்) உட்கொள்கின்றன. பழங்களில் உள்ள சர்க்கரையை ஈஸ்ட் நொதிக்கச் செய்வதால், இயற்கையாகவே அதில் ஆல்கஹால் உருவாகிறது. மனிதர்களுடன் ஒப்பிடும்போது தினமும் ஒரு பீர் அருந்துவதற்கு சமம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வுக்கட்டுரை சயின்ஸ் அட்வான்சஸ் (Science Advances) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சிம்பன்சிகள் நாள் முழுவதும் சிறிது சிறிதாக இந்தப் பழங்களை உண்பதால், அவற்றுக்கு போதை ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

மனிதனால் 150 வயதுக்கு மேல் வாழ முடியுமா? - ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

மனிதர்களின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகள் வரை நீட்டிப்பது குறித்து ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர், சமீபத்தில் பேசியது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.இந்த உரையாடலில் உயிரி தொழில்நு... மேலும் பார்க்க

Sleep: அலாரம் அடிப்பதற்கு முன்பே கண் விழித்துவிடுகிறீர்களா? அதற்கு அறிவியல் காரணம் இதுதான்!

காலையில் அலாரம் அடிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பே கண் விழித்து அலாரமை ஆஃப் செய்திருப்போம். இந்த அனுபவம், நம் வாழ்வில் பலமுறை நடந்திருக்கும். இது ஏதோ தற்செயலான நிகழ்வு என்றோ, அல்லது நமக்கு ஏதோ சூ... மேலும் பார்க்க

மது அருந்துவர்களை கொசு அதிகம் கடிக்குமா? ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்கள்!

மற்றவர்களை காட்டிலும் மது அருந்துபவர்கள் கொசுக்களால் ஈர்க்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்வின் முடிவில் பீர் நுகர்வோருக்கும் கொசு கடித்தல... மேலும் பார்க்க

Airplane: விமானங்கள் வெள்ளை நிறத்தில் மட்டும் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?

பெரும்பாலும் விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதை பார்த்திருப்போம். எதற்காக பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன என்பது குறித்தும் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்களை குறித்தும... மேலும் பார்க்க

அழகான குழந்தைகளை பார்க்கும் போது கிள்ளிவைக்க தோன்றுகிறதா?- இதற்கு பின்னால் இருக்கும் காரணம் இதுதான்!

அழகான குழந்தைகளை பார்க்கும்போது அல்லது சிறிய நாய்க்குட்டி பூனைக்குட்டி என கியூட்டாக ஏதேனும் ஒரு விஷயத்தை பார்க்கும்போது அவற்றை கிள்ளவோ, இறுக்கி அணைக்கவோ, விளையாட்டாக கடிக்கவோ தோன்றும். இந்த உணர்வினை க... மேலும் பார்க்க

இசையால் சாக்லேட்டின் சுவையை அதிகரிக்க முடியுமா? - புதிய ஆய்வில் கண்டறியப்பட்ட சுவாரஸ்யத் தகவல்!

இசையால் மனதை அமைதிப்படுத்தவும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் முடியும் என்று பலரும் அறிந்திருப்போம். ஆனால் ஒரு இசை உணவின் சுவையைக் கூட மேம்படுத்தும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இசை நிபுணர்கள் இசைய... மேலும் பார்க்க