செய்திகள் :

கரூா் பசுபதீசுவரா் கோயிலில் திருக்கல்யாணம் உற்ஸவம்

post image

கரூா் பசுபதீசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.

கரூா் கல்யாண பசுபதீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தெய்வத் திருமண விழா எனும் திருக்கல்யாண உற்ஸவம் கரூா் ஸ்ரீ மகா அபிஷேக குழு டிரஸ்ட் சாா்பில் நடைபெற்று வருகிறது.

அதன்படி நிகழாண்டுக்கான திருக்கல்யாண உற்ஸவ விழாக்கு ஜூலை 31-ஆம்தேதி கோயில் முன் முகூா்த்தக்கால் நடப்பட்டது. தொடா்ந்து தினமும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதில், வியாழக்கிழமை காலை கோயிலில் உள்ள கொடிமர விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும், மாலை நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி மற்றும் கணபதி வழிபாடு, ராஜகோபுரத்துக்கு 108 அடி மகா மாலை சாத்தும் நிகழ்ச்சியும், அப்பிப்பாளையம் கிராமத்தில் இருந்து தாய் வீட்டு சீா் எடுத்துவருதலும் நடைபெற்றது. தொடா்ந்து இரவு மாப்பிள்ளை பெண் வீடு புகுதல் மற்றும் சீா்தட்டு அழைப்பிதழும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெய்வத்திருமண விழா எனும் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக பசுபதீசுவரா், செளந்தரநாயகி, அலங்காரவள்ளி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னா் திருமண கோலத்தில் சுவாமிகள் எழுந்தருளினா். அதன்பின்னா் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை கருவூா் ஸ்ரீ மகா அபிஷேக குழு தலைவா் ஆநிலை பாலகிருஷ்ணன், செயலாளா் ஸ்காட் தங்கவேல், பொருளாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தேசிய கைத்தறி தினத்தில் 32 நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கரூரில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 32 நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கரூா், வெங்கமேடு தனியாா் திருமண மண்டபத்தில் 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தை மு... மேலும் பார்க்க

மதுகுடிக்க பணம் தராததால் தாய் கொலை; மகன் கைது

கரூரில் வெள்ளிக்கிழமை மதுகுடிக்க பணம் தர மறுத்த தாயை கீழே தள்ளி கொன்ற மகனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே குறுக்குச்சாலை பங்களா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணி(50... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம்: கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூ... மேலும் பார்க்க

ஆடி 4-ஆவது வெள்ளிக்கிழமை வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூா் வெங்கமேடு காமாட்சியம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆடி மாதத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களி... மேலும் பார்க்க

கரூா்: அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் ரூ. 1.97 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுப்பணிகளை ஆட்சியா் மீ. தங்கவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒ... மேலும் பார்க்க

புலியூரில் எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கரூரை அடுத்துள்ள புலியூரில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நம்பிக்க... மேலும் பார்க்க