செய்திகள் :

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்; 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு... காற்றில் பறந்த போர் நிறுத்தம்!

post image

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி, காசா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த... அன்று தொடங்கியது இஸ்ரேல் - காசா போர். பொதுவாக, இஸ்ரேல் தான் தாக்குதலை தொடங்கும். ஆனால், இந்தத் தடவை, வழக்கத்திற்கு மாறாக பாலஸ்தீனம் போரை தொடங்கியது.

ஏவுகணை தாக்குதல்கள், வான்வழி தாக்குதல்கள், தரைவழி தாக்குதல்கள் என போர் தொடர்ந்துகொண்டே இருக்க, பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புகளும் தொடர்ந்தன. ஒரு பக்கம் ரஷ்யா - உக்ரைன் போர், இன்னொரு பக்கம் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர்... இது 'மூன்றாம் உலகப் போராக' மாறலாம் என்று உலக நாடுகள் பயந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவும், கத்தாரும் இரண்டு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்தது.

இதன் விளைவாக, கடந்த ஜனவரி மாதம் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் தற்காலிக போர் நிறுத்தம் அமலானது. மேலும், இரு தரப்பும் பணய கைதிகளை விடுவித்து வந்தது. இன்னும் சில நாள்களில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில், இஸ்ரேல் இன்று காசா மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் - காஸா போர்

தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் உள்பட கிட்டதட்ட 300 பேர் உயிரிழந்துள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு, இஸ்ரேல் காசா மீது நடத்திய முதல் மிகப்பெரிய தாக்குதல் இது. இந்தத் தாக்குதலினால் தற்போது போர் நிறுத்தம் ரத்தாகி உள்ளது. பதிலுக்கு காசாவும் தாக்க தொடங்குவார்கள். இதனால், நிலைமை இன்னமும் மோசமடைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு துறை, "காசாவில் ஹமாஸ் இருக்கும் தீவிரவாத பகுதிகளில் தற்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

'காசா பணய கைதிகளை விடுவிக்காததை இந்தத் தாக்குதலுக்கு காரணம்' என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

கவுன்சிலரிடையே மோதல்; மேசையை தூக்கிவீசி அமளிதுமளி- களேபரமான சிவகாசி மாமன்ற கூட்டம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தீர்மானம் குறித்து விவாதம் தொடங்கியபோது, பா.ஜ.க. உறுப்பினர் குமரிபாஸ்கர், மாநகராட... மேலும் பார்க்க

Health: வைட்டமின்- டி குறைபாடு இருப்பவர்கள் மீள்வது எப்படி?

நமது உடலில் எலும்புகளின் கட்டுமானம் சரியாக இருந்தால்தான் நாம் நிற்க, நடக்க, ஓட என எந்த வேலையையும் செய்ய முடியும். எலும்புகளின் கட்டுமானம் சரியில்லை என்றால் நம்மால் எழுந்திருக்கக்கூட முடியாது. எலும்பின... மேலும் பார்க்க

ஊட்டி கோடை விழா: பழ கண்காட்சி முதல் மலர் கண்காட்சி வரை! எந்தெந்த தேதிகளில் என்னனென்ன நிகழ்ச்சிகள்?

உலக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வரும் கோடை வாசஸ்தலமான நீலகிரியில் நடப்பு ஆண்டுக்கான கோடை விழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கண்காட்சி நடைபெறும் பூங்காக்கள் அனைத்தையும் புதுப்பொலிவு... மேலும் பார்க்க

``திமுகவுடன் கள்ளக் கூட்டணி'' - நேருக்கு நேராக முட்டிக்கொள்ளும் தவெக vs பாஜக! - என்ன நடக்கிறது?

டாஸ்மாக் விவகாரம் - தவெக குற்றச்சாட்டுதமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியதை அடுத்து, டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டத்தை அறிவித்து ... மேலும் பார்க்க

ஔவையார்... ஔவை யார்?! - தமிழக சட்டப்பேரவையில் நடந்த சுவாரஸ்ய விவாதம்!

இன்று நடந்து வரும் தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஔவையார் குறித்த சுவாராஸ்ய உரையாடல் சட்டமன்ற உறுப்பினர் ஒ.எஸ் மணியன், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சுவாமிநாதன், சபாநாயகர் அப்பாவுக்கு இடையில் ... மேலும் பார்க்க