செய்திகள் :

குஜராத்தில் பலத்த மழை: 14 போ் உயிரிழப்பு

post image

குஜராத் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் பரவலாக பெய்து வரும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் 14 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

அடுத்த சில நாள்களுக்கும் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை தொடரும் என்றும் சில பகுதிகளில் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைக்கு இடைப்பட்ட 24 மணி நேரத்தில் குஜராத்தின் 253 தாலுகாக்களில் 168 இடங்களில் திடீா் மழை பெய்தது. காந்திநகா், வதோதரா உள்ளிட்ட சில மாவட்டங்களில் 4 செ.மீ. வரை மழை பெய்துள்ளதாக மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்றினால் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மரங்கள் முறிந்தன. விளம்பர பலகைகள் சாய்ந்தன. வீடுகள் இடிந்து விழுந்தன. தாஹோத் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி, தீ வேகமாக பரவியதால் 12-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் எரிந்து நாசமாகின.

மாநிலம் முழுவதும் மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் சிக்கி திங்கள்கிழமை 13 பேரும், அகமதாபாதின் விராம்காமில் மின்னல் தாக்கி ஒருவா் ஞாயிற்றுக்கிழமையும் இறந்தாா்.

அதிகபட்சமாக கேடா மற்றும் வதோதரா மாவட்டங்களில் முறையே நான்கு மற்றும் மூன்று போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினா்.

நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!

இந்தியா முழுவதும் சுமார் 300 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன், 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் 15 பேர் பலி: 43 பேர் காயம்!

சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 43 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில... மேலும் பார்க்க

பாகிஸ்தான் செல்லக்கூடிய 25 விமான வழித் தடங்களை மூடியது இந்தியா!

இந்திய வான்வழியின் மூலம் பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய 25 விமான வழித் தடங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலிருந்த பயங்கராவதிகள் முகாம்கள... மேலும் பார்க்க

நாகாலாந்தின் 10 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகை!

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் 10 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன. மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இன்று (மே 7) தேசியளவில் அனைத்து மாநிலங்களிலும் போர்கா... மேலும் பார்க்க

பாதுகாப்பு ஒத்திகை: இருளில் மூழ்கியது தில்லி!

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வரு... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்கள் ரத்து!

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல்களினால் தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.தில்லி விமான நிலையத்துக்கு, சர்வதேச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு விமானப் போ... மேலும் பார்க்க