செய்திகள் :

கும்பமேளாவில் 45 நாள்களில் 30 கோடி வருவாய் ஈட்டிய படகோட்டி!

post image

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நிகழ்ந்த கும்பமேளாவில் 45 நாள்களில் 30 கோடி வருவாயை ஈட்டியுள்ளார் படகோட்டி ஒருவர். இது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

உலகில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் கூடும் இடமாக உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நிகழ்ந்த மாபெரும் ஆன்மிகத் திருவிழாவான கும்பமேளா கடந்த ஜன.13 முதல் பிப்.26 வரை பிரம்மாண்டமாக நடைபெற்றது.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சியில் உ.பி. அரசு எதிர்பார்த்ததை விட அதிகளவிலான மக்கள் புனித நீராடினர். திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் முர்மு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள், சினிமா நடிகை-நடிகர்கள் என மொத்தம் சுமார் 65 கோடிக்கும் கூடுதலான பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர். ஒரேநாளில் வைரலான இளம்பெண், தீ விபத்து, சங்கமத்தில் உள் நீர் குளிப்பதற்கு ஏற்றதல்ல என்ற அறிக்கை எனப் பல சுவாரசிய சம்பவங்களும் நடைபெற்றன.

இந்த நிலையில் உத்தரப் பிரசேத சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. கூட்டத்தொடரில் கும்பமேளாவைப் பற்றி முதல்வர் ஆதித்யநாத் கூறுகையில்,

கும்பமேளாவில் 45 நாள்களில் படகோட்டி குடும்பம் ஒன்று கிட்டத்தட்ட ரூ.30 கோடி வருவாய் ஈட்டியுள்ள சுவாரசிய வெற்றிக் கதையை அவர் கூறினார். கும்பமேளாவில் படகு ஓட்டும் படகோட்டியிடம் 130 படகுகள் இருந்ததாகவும், நாளொன்றுக்கு ஒரு படகிற்கு ரூ.50 முதல் 52 ஆயிரம் வருவாய் ஈட்டியுள்ளது. ஒவ்வொரு படகும் ரூ.23 லட்சம் என 130 படகுகளில் மொத்தம் ரூ.30 கோடி வருவாய் ஈட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுமட்டுமல்லாது கும்பமேளாவில் கடத்தல், கொள்ளை, துன்புறுத்தல் என ஒரு வழக்குகூட பதிவாகவில்லை என்றும் 65 கோடி மக்களும் மகிழ்ச்சியாக சங்கமத்தில் நீராடிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார். கும்பமேளா மூலம் ரூ.3 லட்சம் கோடி வணிக வருவாய் கிடைத்ததாகவும், இதனால் பல தொழில்கள் பயனடைந்ததாகவும் அவர் கூறினார்.

கர்நாடகத்தில் 7 மாவட்டங்களில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் சோதனை!

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்தல், ஊழலில் ஈடுபடுவது குறித்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து கர்நாடக லோக்ஆயுக்தா ஏழு மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமாக இடங்களில் சோதனை நடத்தி வருகின்றத... மேலும் பார்க்க

தெலங்கானா விபத்து: மீட்புப் பணியில் கேரள 'கடாவர்' நாய்கள்!

காணாமல் போன மனிதர்கள், சடலங்களை கண்டறிவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற கேரளத்தைச் சேர்ந்த மோப்ப நாய்கள் தெலங்கானா சுரங்க விபத்து பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளன. தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட... மேலும் பார்க்க

மூன்று அல்ல பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்: சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச பல்கலைக்கழகங்களில் மூன்று அல்ல, பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கல்விக் கொள்கைக்... மேலும் பார்க்க

பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.மேலும், இந்திய தேசியக் கொடியை அமைச்சர் முன்னிலையில் கிழித்ததால... மேலும் பார்க்க

இந்திய தொழில்நுட்ப மறுமலா்ச்சி வளா்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம் -அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

அஸ்வினி வைஷ்ணவ்- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, ரயில்வே, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா்மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில், சிறு விவசாயி ஒருவா் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூ... மேலும் பார்க்க

டிஜிட்டல் முறைகள் மூலம் நிா்வாகிகள் திறன் மேம்பாடு: தோ்தல் ஆணையம்

தோ்தல் துறை நிா்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. புது தில்லியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை தோ்தல் அதிகாரிகளின் ... மேலும் பார்க்க