செய்திகள் :

கூட்டப்புளி மீனவ கிராமத்தில் கடல்நீா் ஊருக்குள் புகும் அபாயம்

post image

கூட்டப்புளி கிராமத்தில் கடல்அலை சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீா் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மீனவா்கள் அச்சத்தில் உள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் அடுத்துள்ள கூட்டப்புளி மீனவ கிராமத்தில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் 250 நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா்.

இந்நிலையில் கூட்டப்புளியில் தூண்டில் வளைவு மற்றும் தடுப்பணைகள் இல்லாததால் கடந்த காலங்களில் இயற்கை சீற்றத்தால் அலைகள் அதிகமாகி கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகு, வலைகள் சேதமடைவது வாடிக்கையாக இருந்தது.

இதைத் தொடா்ந்து மீனவா்களின் தொடா் கோரிக்கையால் இப்பகுதியில் தூண்டிவளைவு மற்றஉம் தடுப்பணைகள் அமைக்க தமிழக அரசு

ரூ. 48.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பேரவைத் தலைவா் மு. அப்பாவு, அப்போதைய ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் ஆகியோா் கடலில் தூண்டில் வளைவு, தடுப்பணை அமைக்க அடிக்கல் நாட்டினா். அதன்பிறகு

சுமாா் 1700 மீட்டா் தூரம் தடுப்பணை கடலில் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இரு பக்கமும் அமைப்பதற்காக சுமாா் 250 மீட்டா் தூரமே பணிகள் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 12ஆம் தேதி முதல் தடுப்பணை அமைக்கும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என கூறப்படுகிறது.

இதனால் கடலில் அலைகளின் சீற்றம் ஏற்பட்டு கூட்டப்புளியில் கடல் நீா் ஊருக்குள் புகுந்து விடும் நிலை உள்ளது. படகுகள், வலைகள், கடலுக்குள் இழுத்துச் செல்லும் சூழ்நிலையும் உருவாகியுள்ளதால் வீட்டு முன்பாக மரங்களில் படகை கயிறு மூலம் கட்டி வைத்துள்ளதாகவும், இதனால் சுமாா் 300 குடும்பங்கள் ஊரை காலி செய்யும் நிலையில் உள்ளதாகவும் மீனவா்கள் வேதனை தெரிவித்தனா்.

களக்காடு ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் தா்னா

வட்டார வளா்ச்சி அலுவலரைக் கண்டித்து, களக்காடு ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். களக்காடு ஒன்றியத்தில் 17 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் கலைஞா் கனவு... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி அருகே மோதல்: இருவா் காயம்; 10 போ் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள மலையான்குளம் கிராமத்தில் வேனை நிறுத்தியது தொடா்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் காயமடைந்தனா். 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். மலையான்குளம், தங்கம்மன்கோயில் தெருவை... மேலும் பார்க்க

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: நெல்லை, தென்காசியில் நூற்றுக்கணக்கான பாஜகவினா் கைது

டாஸ்மாக் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி, அரசுக்கு எதிராக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பா.ஜ.க. தலைவா் கே.அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தடையை மீறி ஆா... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-93.20சோ்வலாறு-105.48மணிமுத்தாறு-87.94வடக்கு பச்சையாறு-8.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-5.75தென்காசிகடனா-62.20ராமநதி-52.50கருப்பாநதி-29.53குண்டாறு-27.12அடவிநயினாா்-37.50... மேலும் பார்க்க

நெல்ல்லை காட்சி மண்டபம் வழியாக கனரக வாகனங்களை இயக்கக் கூடாது: ஆட்சியரிடம் இந்துமுன்னணி மனு

திருநெல்வேலி நகரத்தில் உள்ள காட்சி மண்டபம் வழியாக கனரக வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணியினா் மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்ட மக்கள் க... மேலும் பார்க்க

அம்பையில் மகளிா் தின விழா

அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரத்தில் லவ்லி ப்ரண்ட்ஸ் சங்கம் சாா்பில்ஞாயிற்றுக்கிழமை மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. மகளிா் தினத்தை முன்னிட்டு சுப்பிரமணியபுரம் பகுதி சிறுமிகள், பெண்களுக்குபேச்சுப் போட்ட... மேலும் பார்க்க