செய்திகள் :

கேரளா: மகன், மருமகள், பேத்திகளை வீட்டில் பூட்டி தீவைத்து கொன்ற 82 வயது முதியவருக்கு தூக்குத் தண்டனை

post image

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழ அருகே உள்ள சீனிக்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஹமீது (82). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் முகமது பைசல் (45), மருமகள் ஷீபா (40), பேத்திகள் மெஹ்ரா (17), அஸ்னா (13) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

ஹமீது தனது சொத்துகளை இரண்டு மகன்களுக்குமாக பங்கிட்டு வழங்கியிருந்தார். ஆனால், சொத்து பங்கிடும் போது கூறிய சில விஷயங்களை மகன் முகமது பைசல் நிறைவேற்றவில்லை எனக் கூறி, ஹமீது அவ்வப்போது பிரச்னை செய்துவந்தார்.

முகமது பைசல் தனியாக ஒரு வீடு கட்டி விரைவில் அங்கு குடியேறத் திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில், 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், முகமது பைசலின் மனைவி மற்றும் மகள்கள் உள்ளிட்ட நால்வரையும் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொலை செய்தார் ஹமீது.

முகமது பைசல், ஷீபா, மெஹரா, அஸ்னா

ஹமீது இந்த கொலையை அரங்கேற்றிய விதம் அந்த சமயத்தில் நாட்டையே அதிரவைத்தது. பெட்ரோல் பங்கில் இருந்து சில பாட்டில்களில் பெட்ரோல் வாங்கிய அவர், இரவு அனைவரும் தூங்கிய பின் நள்ளிரவில் சுமார் 12.30 மணிக்கு மகன் முகமது பைசலின் வீட்டுக்குச் சென்றார். பெட்ரோல் ஊற்றி தீவைக்கும் முன் சில முன்னேற்பாடுகளை செய்திருந்தார்.

மகனும் அவரது குடும்பத்தினரும் தப்பிவிடக்கூடாது என்பதற்காக, அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த அறையை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, வீட்டின் வெளிப்புற வாசலையும் அடைத்தார்.

அட்டாச் பாத்ரூம் அமைந்திருந்த அறையில் அவர்கள் தூங்கியிருந்ததால், தண்ணீர் பிடித்து தீயை அணைத்துவிடக்கூடாது என்பதற்காக, வீட்டின் தண்ணீர் டேங்கில் இருந்த தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றினார்.

அதையும் மீறி மின் மோட்டாரை இயக்கி தண்ணீர் எடுக்கக்கூடாது எனக் கருதி, மோட்டாருக்குச் செல்லும் வயரை துண்டித்தார்.

மகன், மருமகள், பேத்திகள் தூங்கியிருந்த படுக்கையறை ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார் ஹமீது. மகன், மருமகள், பேத்திகள் தீயில் கருகி அலறித் துடித்தபோது, தன்னிடம் இருந்த சில பெட்ரோல் பாட்டில்களை திறந்து ஜன்னல் வழியாக அறைக்குள் வீசினார்.

கொலை நடந்த வீடு

இதற்கிடையில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வெளியே வந்தபோது, முகமது பைசலின் அறையில் தீ எரிவதை பார்த்தனர். தொடுபுழா தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீ அணைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது, பாத்ரூமுக்குள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி முகமது பைசலும், அவரது மனைவி மற்றும் இரு மகள்களும் கருகிய நிலையில் கிடந்தனர்.

கொடூரச் செயலை மேற்கொண்ட ஹமீது கைது செய்யப்பட்டார். வழக்கு தொடுபுழா 1-ஆம் கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது.

அரிதான இவ்வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அதைத்தொடர்ந்து, ஹமீதுக்கு மரண தண்டனையும் ரூ.6 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

சிவகாசி: அரசு ஒப்பந்த பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.55 லட்சம் மோசடி; போலி பி.டி.ஓ கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பேராபட்டியைச் சேர்ந்த கண்ணன் (51) அச்சகம், டிசைனிங் மற்றும் கிரானைட் அறுக்கும் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.அந்நிறுவனத்தில் பேராபட்டியைச் சேர்ந்த சங்கரநாராயணன் பொறிய... மேலும் பார்க்க

``திருமணம் மீறிய உறவில் மனைவி'' - 2 குழந்தைகளை கொன்றுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட தொழிலாளி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலுள்ள தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (42). இவருக்கும், ஆரணி அருகேயுள்ள ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி (32) என்பவருக்கும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ... மேலும் பார்க்க

திருப்பூர்: பட்டா மாறுதலுக்கு ரூ. 40 ஆயிரம் லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலர் கைது; சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள சந்தவநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. தையல் தொழிலாளரான இவர் தனது தோட்டத்துக்கு வாரிசு அடிப்படையில், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ண... மேலும் பார்க்க

காரின் மீது சிறுநீர் கழித்த நபரை கண்டித்த இந்திய வம்சாவளி அடித்துக்கொலை - கனடாவில் அதிர்ச்சி

கனடாவின் எட்மண்டனில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தவர் அர்வி சிங் சாகூ (55). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இந்த நிலையில், அக்டோபர் 19-ம் தேதி அர்வி சிங் சாகூவும் அவரது மனைவிய... மேலும் பார்க்க

மேயர், அவரின் கணவர் படுகொலை வழக்கு - 5 பேருக்கு மரண தண்டனை விதிப்பு; ஹைஅலர்ட்டில் சித்தூர்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாநகராட்சியில் கடந்த 2015-ம் ஆண்டு மேயராக இருந்தவர் அனுராதா. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவரின் கணவர் கட்டாரி மோகன். கடந்த 17-11-2015 ஆம் ஆண்டு மாநகராட்சி அலுவலகத்தில... மேலும் பார்க்க

கரூர் : சம்பவ இடத்தில் வீடியோ ஆதாரங்கள், நவீன கேமராக்களுடன் சி.பி.ஐ விசாரணை!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்தகொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்... மேலும் பார்க்க