செய்திகள் :

கேரளா: மகன், மருமகள், பேத்திகளை வீட்டில் பூட்டி தீவைத்து கொன்ற 82 வயது முதியவருக்கு தூக்குத் தண்டனை

post image

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழ அருகே உள்ள சீனிக்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஹமீது (82). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் முகமது பைசல் (45), மருமகள் ஷீபா (40), பேத்திகள் மெஹ்ரா (17), அஸ்னா (13) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

ஹமீது தனது சொத்துகளை இரண்டு மகன்களுக்குமாக பங்கிட்டு வழங்கியிருந்தார். ஆனால், சொத்து பங்கிடும் போது கூறிய சில விஷயங்களை மகன் முகமது பைசல் நிறைவேற்றவில்லை எனக் கூறி, ஹமீது அவ்வப்போது பிரச்னை செய்துவந்தார்.

முகமது பைசல் தனியாக ஒரு வீடு கட்டி விரைவில் அங்கு குடியேறத் திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில், 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், முகமது பைசலின் மனைவி மற்றும் மகள்கள் உள்ளிட்ட நால்வரையும் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொலை செய்தார் ஹமீது.

முகமது பைசல், ஷீபா, மெஹரா, அஸ்னா

ஹமீது இந்த கொலையை அரங்கேற்றிய விதம் அந்த சமயத்தில் நாட்டையே அதிரவைத்தது. பெட்ரோல் பங்கில் இருந்து சில பாட்டில்களில் பெட்ரோல் வாங்கிய அவர், இரவு அனைவரும் தூங்கிய பின் நள்ளிரவில் சுமார் 12.30 மணிக்கு மகன் முகமது பைசலின் வீட்டுக்குச் சென்றார். பெட்ரோல் ஊற்றி தீவைக்கும் முன் சில முன்னேற்பாடுகளை செய்திருந்தார்.

மகனும் அவரது குடும்பத்தினரும் தப்பிவிடக்கூடாது என்பதற்காக, அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த அறையை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, வீட்டின் வெளிப்புற வாசலையும் அடைத்தார்.

அட்டாச் பாத்ரூம் அமைந்திருந்த அறையில் அவர்கள் தூங்கியிருந்ததால், தண்ணீர் பிடித்து தீயை அணைத்துவிடக்கூடாது என்பதற்காக, வீட்டின் தண்ணீர் டேங்கில் இருந்த தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றினார்.

அதையும் மீறி மின் மோட்டாரை இயக்கி தண்ணீர் எடுக்கக்கூடாது எனக் கருதி, மோட்டாருக்குச் செல்லும் வயரை துண்டித்தார்.

மகன், மருமகள், பேத்திகள் தூங்கியிருந்த படுக்கையறை ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார் ஹமீது. மகன், மருமகள், பேத்திகள் தீயில் கருகி அலறித் துடித்தபோது, தன்னிடம் இருந்த சில பெட்ரோல் பாட்டில்களை திறந்து ஜன்னல் வழியாக அறைக்குள் வீசினார்.

கொலை நடந்த வீடு

இதற்கிடையில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வெளியே வந்தபோது, முகமது பைசலின் அறையில் தீ எரிவதை பார்த்தனர். தொடுபுழா தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீ அணைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது, பாத்ரூமுக்குள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி முகமது பைசலும், அவரது மனைவி மற்றும் இரு மகள்களும் கருகிய நிலையில் கிடந்தனர்.

கொடூரச் செயலை மேற்கொண்ட ஹமீது கைது செய்யப்பட்டார். வழக்கு தொடுபுழா 1-ஆம் கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது.

அரிதான இவ்வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அதைத்தொடர்ந்து, ஹமீதுக்கு மரண தண்டனையும் ரூ.6 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

கோவை இருகூர் விவகாரம்: 'கணவர் அடிச்சார்; நானும் அடிச்சேன்' திடீர் திருப்பமாக வெளியான பெண்ணின் வீடியோ

கோவை மாவட்டம், இருகூர் அருகே உள்ள அத்தப்பன்கவுண்டன்புதூர் பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக சிசிடிவி வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பெண் அலறி துடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டத... மேலும் பார்க்க

விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரை, கத்தியால் குத்திய கைதி - ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி!

சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்... மேலும் பார்க்க

கரூர்: மது அருந்தும் போது தகராறு; நண்பரை பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்த இளைஞர்கள் கைது!

கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரம் ஹரிஜன தெருவை சேர்ந்தவர் சண்முகம் என்கின்ற பாலன் (வயது: 21). இவர், தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு நாடக மேடை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்... மேலும் பார்க்க

காதலிக்க மறுத்த மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞர் - வீட்டுக்கு சென்று பயங்கரம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாவத்தூர் ஊராட்சி, குளக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் வினிதா (வயது: 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரி விடுதியில் தங்கி பி.பார்ம் 4-ஆம் ஆண்டு பட... மேலும் பார்க்க

ஓசூர்: இளம் பெண்ணுடன் ஏற்பட்ட தன்பாலின ஈர்ப்பு; கைக்குழந்தையை கொன்ற கொடூரத் தாய் - நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகேயுள்ள கெலமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). பெயிண்டர் தொழிலாளி. இவரின் மனைவி பாரதி (26). இந்த தம்பதிக்கு 5 மற்றும... மேலும் பார்க்க

மூதாட்டிகள் கொலை வழக்கு; குவாரியிலிருந்து தப்பிய கொலையாளி; சுட்டுப்பிடித்த போலீஸ்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த பெரியம்மா மற்றும் பாவாயி ஆகிய இரண்டு பேரையும் கடந்த 03.11.2025 தேதியில் இருந்து காணவில்லை என மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புக... மேலும் பார்க்க