செய்திகள் :

``திருமணம் மீறிய உறவில் மனைவி'' - 2 குழந்தைகளை கொன்றுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட தொழிலாளி

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலுள்ள தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (42). இவருக்கும், ஆரணி அருகேயுள்ள ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி (32) என்பவருக்கும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 9 வயதான கயல்விழி என்ற மகளும், 7 வயதான நிதர்சன் என்ற மகனும் இருந்தனர்.

இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புத் தேடி குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார் கிருஷ்ணன். அங்கு வேலை செய்தபடியே, பிள்ளைகளையும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்திருந்தார்.

2 குழந்தைகளை கொன்றுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட தொழிலாளி
கிருஷ்ணன், கயல்விழி, நிதர்சன்

இதனிடையே, பூங்கொடிக்கு வேறு ஒருவருடன் திருமணத்திற்கு மீறிய தொடர்பு ஏற்பட்டது. இது தெரியவந்ததும் மனவேதனைக்குள்ளான கிருஷ்ணன் கடந்த ஒரு வருடமாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். பிள்ளைகளையும் தனது அரவணைப்பிலேயே பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊரான தெள்ளூர் கிராமத்துக்கு பிள்ளைகளை அழைத்துவந்தார் கிருஷ்ணன். பண்டிகை முடிந்து ஒரு வாரமாகியும் சென்னைக்கு திரும்பாமல் இருந்தார்.

இதையடுத்து, இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாமல் இருந்ததை கவனித்த அக்கம் பக்கத்து உறவினர்கள் அவரது வீட்டுக்குச் சென்றனர். அப்போது, கிருஷ்ணன் தூக்கில் சடலமாகவும், அவரது இரு பிள்ளைகளும் தரையில் சடலமாகவும் சுருண்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக சேத்துப்பட்டு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் மூன்று உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், தாயின் ஏக்கத்தில் இருந்த பிள்ளைகளுக்காக மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பியிருந்தார் கிருஷ்ணன். ஆனால், மனைவி பூங்கொடி தனது காதலன் மீதான ஆசையால் பிள்ளைகளையும் பார்க்க விரும்பாமல், கணவனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை எனத் தெரிவித்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

இதனால் ஏற்பட்ட துயர்மிகுதியால், தூங்கிக்கொண்டிருந்த இரு பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, கிருஷ்ணன் தனது உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலம்

சம்பவம் நடந்த வீட்டில் இருந்து கிருஷ்ணன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றியிருக்கின்றனர். அதில், ``என் சொத்து, நகை எல்லாம் வாங்கிக்கொண்டு ஏமாற்றினாள். குழந்தைகள் மேல் கொஞ்சம்கூட பாசம் இல்லை. அவளிடம் விட்டுச்சென்றால், ஆகாரம் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைகள் இறப்பதைவிட என்னிடம் இறப்பது நல்லது. அவளின் குடும்பம் சரி இல்லை’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த கடிதத்தை வைத்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைக் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

சிவகாசி: அரசு ஒப்பந்த பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.55 லட்சம் மோசடி; போலி பி.டி.ஓ கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பேராபட்டியைச் சேர்ந்த கண்ணன் (51) அச்சகம், டிசைனிங் மற்றும் கிரானைட் அறுக்கும் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.அந்நிறுவனத்தில் பேராபட்டியைச் சேர்ந்த சங்கரநாராயணன் பொறிய... மேலும் பார்க்க

திருப்பூர்: பட்டா மாறுதலுக்கு ரூ. 40 ஆயிரம் லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலர் கைது; சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள சந்தவநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. தையல் தொழிலாளரான இவர் தனது தோட்டத்துக்கு வாரிசு அடிப்படையில், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ண... மேலும் பார்க்க

கேரளா: மகன், மருமகள், பேத்திகளை வீட்டில் பூட்டி தீவைத்து கொன்ற 82 வயது முதியவருக்கு தூக்குத் தண்டனை

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழ அருகே உள்ள சீனிக்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஹமீது (82). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் முகமது பைசல் (45), மருமகள் ஷீபா (40), பேத்திகள் மெஹ்ரா (17)... மேலும் பார்க்க

காரின் மீது சிறுநீர் கழித்த நபரை கண்டித்த இந்திய வம்சாவளி அடித்துக்கொலை - கனடாவில் அதிர்ச்சி

கனடாவின் எட்மண்டனில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தவர் அர்வி சிங் சாகூ (55). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இந்த நிலையில், அக்டோபர் 19-ம் தேதி அர்வி சிங் சாகூவும் அவரது மனைவிய... மேலும் பார்க்க

மேயர், அவரின் கணவர் படுகொலை வழக்கு - 5 பேருக்கு மரண தண்டனை விதிப்பு; ஹைஅலர்ட்டில் சித்தூர்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாநகராட்சியில் கடந்த 2015-ம் ஆண்டு மேயராக இருந்தவர் அனுராதா. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவரின் கணவர் கட்டாரி மோகன். கடந்த 17-11-2015 ஆம் ஆண்டு மாநகராட்சி அலுவலகத்தில... மேலும் பார்க்க

கரூர் : சம்பவ இடத்தில் வீடியோ ஆதாரங்கள், நவீன கேமராக்களுடன் சி.பி.ஐ விசாரணை!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்தகொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்... மேலும் பார்க்க