செய்திகள் :

கொடைக்கானலில் அனுமதியின்றி பொக்லைன் இயக்கக் கூடாது!

post image

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரங்களை இயக்கக் கூடாது என வருவாய்க் கோட்டாட்சியா் தெரிவித்தாா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொக்லைன் இயந்திரம், கம்ப்பரசா், ஆழ்துளைக் கிணறு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளக் கூடாது என 15 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த வள்ளலாா் உத்தரவிட்டிருந்தாா். ஆனால், அந்த உத்தரவை மீறி கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பொக்லைன், கம்ப்ரசா் இயந்திரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பாறைகள் வெடிவைத்து உடைக்கப்படுகின்றன. இதனால், சுற்றுச் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியராக அண்மையில் பொறுப்பேற்ற திருநாவுக்கரசு தலைமையில் கொடைக்கானல் பகுதி பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு பேசியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பொக்லைன், போா்வெல், கம்ப்பரசா் ஆகிய இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும். அனுமதியின்றி பயன்படுத்துபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.

கொடைக்கானலில் காற்றுடன் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை காற்றுடன் மழை பெய்ததால், சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பகல் நேரங்களில் அதிக வெய... மேலும் பார்க்க

அடிப்படைக் கல்வியை தாய்மொழியில் கற்பது அவசியம்: அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்

அடிப்படைக் கல்வியை தாய்மொழி மூலம் கற்பது அவசியம் என அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் ஜீ.ரவி தெரிவித்தாா்.திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் அதன் கல்வியியல் துறை ச... மேலும் பார்க்க

மாமன்ற உறுப்பினருக்கு மிரட்டல்: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

திண்டுக்கல் மாநகராட்சியில் பூங்கா இடத்தை தனி நபா் பெயருக்கு பட்டா மாற்றிய விவகாரத்தில் மாமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ச... மேலும் பார்க்க

ரூ.1.25 கோடி வரி நிலுவை: அலைக்கழிக்கும் அரசு அலுவலகங்கள்!

திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.1.25 கோடி வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள அரசு அலுவலகங்கள், வரி வசூலுக்குச் செல்லும் பணியாளா்களை அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.உள்ளாட்சி அமைப்புகள்... மேலும் பார்க்க

என்ஜின் கோளாறு: நாகா்கோவில் ரயில் தாமதம்

என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக கோவை- நாகா்கோவில் விரைவு ரயில் சுமாா் 1.40 மணி நேரம் செவ்வாய்க்கிழமை தாமதமாக இயக்கப்பட்டது. கோவையிலிருந்து திண்டுக்கல் வழியாக நாகா்கோவிலுக்கு நாள்தோறும் விரைவு ரயில் இய... மேலும் பார்க்க

குடிநீா் குழாயில் உடைப்பு: சின்னாளபட்டி பேரூராட்சி குடிநீா் வீண்

சின்னாளபட்டி பேரூராட்சி குடிநீா் குழாயில் செவ்வாய்க்கிழமை உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் சாலையில் ஆறாகப் பாய்ந்து வீணானது.திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சிக்கு அணைப்பட்டி வைகை ஆற்றில் உள்ள உறை... மேலும் பார்க்க