செய்திகள் :

கோயில்களைவிட்டு, அறநிலையத் துறை வெளியேற வேண்டும்: அண்ணாமலை

post image

தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாள் திருச்செந்தூர் கோயிலில், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று ராமேஸ்வரம் கோயிலில் வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

நேற்று திருச்செந்தூர் கோவிலில் உயிரிழந்த பக்தருக்கு ஏற்கனவே உடல் நிலை சரியில்லை என்று சமாளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , இன்று என்ன கதை வைத்திருக்கிறார்?

இதையும் படிக்க: பிரதமர் மோடியுடன் இளையராஜா சந்திப்பு!

கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாமல், கோயில் உண்டியல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறது திமுக அரசு. மேலும், பக்தர்கள் அதிகம் வரும் கோயில்களில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், எந்தப் பணிகளும் செய்யாத அறநிலையத்துறைக்கு வாகனங்கள் வாங்கி அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர்.

குறிப்பாக, திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்காமல், வெளியே செல்லவும் அனுமதிக்காமல் அடைத்து வைத்து விட்டு திருப்பதி கோயிலில் 24 மணி நேரம் நிற்பான் என்று திமிராகப் பேசிய அமைச்சர் சேகர்பாபுதான், இந்த இரண்டு பக்தர்களின் உயிரிழப்புக்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும்.

செந்தில் பாலாஜி திடீர் தில்லி பயணம்! காரணம் என்ன?

தமிழக அன்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி திடீர் பயணமாக தில்லி சென்று திரும்பியுள்ளார்.தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1,000 கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்த... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது - தமிழக அரசு

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச்19) போராட்டத்தை அ... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து, மத்திய வெளிய... மேலும் பார்க்க

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தி... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை புதன்கிழமை (மாா்ச் 19) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை மற்றும் வேளாண் நிதிந... மேலும் பார்க்க

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? பிரேமலதா விளக்கம்

வரும் சட்டப்பேரவை தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரிவித்தாா். பிரேமலதா தனது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினாா். அதையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அல... மேலும் பார்க்க