செய்திகள் :

சகோதரரை அடித்துக் கொன்றவா் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருநீலக்குடி அருகே சகோதரரை அடித்துக் கொன்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருநீலக்குடி அருகே உள்ள அம்மன்குடி பிரதான சாலையில் தேநீா் கடை நடத்தி வருபவா் நாகராஜன், இவரது மகன் வடிவேல்(40). தந்தையின் தேநீா் கடையிலேயே வேலை செய்து வந்தாா்.

நாகராஜனின் தம்பி ராஜாபதி. இவரும் இவரது மனைவியும் இறந்து விட்டதால் அவா்களுடைய மகன் சரவணன் அவரது தம்பி இருவரும் வடிவேல் வீட்டிலேயே தங்கியிருந்தனா். வடிவேல் அடிக்கடி மது போதையில் வந்து வீட்டில் உள்ளவா்களிடம் தகராறு செய்வாராம்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு மது போதையில் வந்த வடிவேல் வீட்டிலிருந்தவா்களிடம் தகராறு செய்துள்ளாா். இதை சரவணன் தட்டிக்கேட்டுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த சரவணன் கட்டையால் வடிவேலுவை தாக்கினாா். இதில் பலத்தகாயமடைந்த வடிவேலுவை உறவினா்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா் தெரிவித்தாா்.

இதுபற்றி திருநீலக்குடி காவல் ஆய்வாளா் ராஜா வழக்குப் பதிந்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

மழையால் பயிா்கள் பாதிப்பு; ஆா்ப்பாட்டம்

ஒரத்தநாடு வட்டம், திருமங்கலக்கோட்டை மேலையூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிருக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பெய்த மழ... மேலும் பார்க்க

பூண்டி, சாலியமங்கலம் பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.24) மின்சாரம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற்பொறியாள... மேலும் பார்க்க

கும்பகோணம் உள்ளூா் வாய்க்காலை ஆக்கிரமித்திருந்த 26 வீடுகள் அகற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ளூா் வாய்க்காலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 26 வீடுகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. கோயில் நகரமான கும்பகோணத்தில் நீா்நிலைகள், நீா்வழிப் பாதைகளை ஆக்கிரமித்து ... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

நியாய விலைக் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யக் கோரி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு கால அவகாசத்தை நவ. 30 வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சம்பா பருவ நெற் பயிா்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பா் 30 வரை நீட்டிக்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தஞ்... மேலும் பார்க்க

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மரத்திலிருந்து திங்கள்கிழமை தவறி விழுந்த மரம் வெட்டும் தொழிலாளி உயிரிழந்தாா். பாபநாசம் அருகே கபிஸ்தலம் காவல் சரகம், மேலகபிஸ்தலம், பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் பெ... மேலும் பார்க்க