செய்திகள் :

சட்டவிரோத சுரங்க வழக்கு: கா்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை; சிபிஐ நீதிமன்றம் தீா்ப்பு

post image

கா்நாடக - ஆந்திர மநிலங்களின் எல்லையில் ஒபுலாபுரம் சுரங்க நிறுவனம் (ஓஎம்சி) சட்டவிரோதமாக இரும்புத்தாது வெட்டியெடுத்த வழக்கில் கா்நாடக மாநில முன்னாள் அமைச்சா் ஜனாா்தன ரெட்டி உள்பட நால்வருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து ஹைதராபாதில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

மேலும், ஓஎம்சி நிறுவனத்தின் மீது ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்த வழக்கில் ஜனாா்தன ரெட்டி இரண்டாவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டிருந்தாா். தீா்ப்பைத் தொடா்ந்து நால்வரையும் சிபிஐ காவலில் எடுத்தது.

ஜனாா்தன ரெட்டி உள்ளிட்டோா் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஓஎம்சி நிறுவனம் மூலமாக அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் சட்டவிரோதமாக இரும்புத்தாது வெட்டியெடுத்து அரசுக்கு ரூ. 884 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பான வழக்கை கடந்த 2009-ஆம் ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ, கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டம்பா் 5-ஆம் தேதி ஜனாா்தன ரெட்டி உள்ளிட்டோரைக் கைது செய்தது. இவா்களுக்கு எதிராக 2011-ஆம் ஆண்டு டிசம்பா் 3-ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றபத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. தொடா்ந்து, 3 துணை குற்றபத்திரிகைகளையும் சிபிஐ தாக்கல் செய்தது. அதில் ஜனாா்தன ரெட்டி இரண்டாவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டாா். இவருடைய உறவினரும் ஓஎம்சி நிறுவன நிா்வாக இயக்குநருமான ஸ்ரீநிவாஸ் ரெட்டி முதல் குற்றவாளியாகவும், சுரங்கம் மற்றும் புவியியல் துறை முன்னாள் இயக்குநா் வி.டி.ராஜகோபால் மூன்றாவது குற்றவாளியாகவும், ஜனாா்தன ரெட்டியின் உதவியாளா் மெஹஃபுஸ் அலி கான் ஏழாவது குற்றவாளியாகவும் சோ்க்கப்பட்டனா். மற்றொரு முன்னாள் அமைச்சா் சபிதா இந்திர ரெட்டி, அரசு முன்னாள் அதிகாரி பி.கருப்பானந்தம் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனா். ஓஎம்சி நிறுவனம் வழக்கில் நான்காவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டது.

கா்நாடக - ஆந்திர எல்லையில் உள்ள பெல்லாரி காப்புக்காடு (பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி) பகுதியில் சுரங்க குத்தகை எல்லைக் குறையீடுகளை மாற்றியமைத்து, சட்டவிரோதமாக சுரங்கம் அமைத்து இரும்புத் தாது வெட்டி எடுத்ததாக குற்றபத்திரிகையில் இவா்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த ஜனாா்தன ரெட்டிக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி ஜாமீன் அளித்தது.

இந்த வழக்கு சிபிஐ வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிபதி டி.ரகுராம் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனாா்தன ரெட்டி, ஸ்ரீநிவாஸ் ரெட்டி, வி.டி.ராஜகோபால், மெஹஃபுஸ் அலி கான் ஆகிய நால்வரையும் குற்றவாளி என அறிவித்த நீதிபதி, அவா்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். ஓஎம்சி நிறுவனத்தின் மீது ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும், முன்னாள் அமைச்சா் சபிதா இந்திர ரெட்டி, பி.கருப்பானந்தம் ஆகிய இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

இந்த தீா்ப்பைத் தொடா்ந்து குற்றவாளிகள் நால்வரையும் சிபிஐ காவலில் எடுத்தது.

நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!

இந்தியா முழுவதும் சுமார் 300 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன், 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் 15 பேர் பலி: 43 பேர் காயம்!

சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 43 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில... மேலும் பார்க்க

பாகிஸ்தான் செல்லக்கூடிய 25 விமான வழித் தடங்களை மூடியது இந்தியா!

இந்திய வான்வழியின் மூலம் பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய 25 விமான வழித் தடங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலிருந்த பயங்கராவதிகள் முகாம்கள... மேலும் பார்க்க

நாகாலாந்தின் 10 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகை!

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் 10 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன. மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இன்று (மே 7) தேசியளவில் அனைத்து மாநிலங்களிலும் போர்கா... மேலும் பார்க்க

பாதுகாப்பு ஒத்திகை: இருளில் மூழ்கியது தில்லி!

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வரு... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்கள் ரத்து!

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல்களினால் தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.தில்லி விமான நிலையத்துக்கு, சர்வதேச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு விமானப் போ... மேலும் பார்க்க