நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!
சட்டவிரோத சுரங்க வழக்கு: கா்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை; சிபிஐ நீதிமன்றம் தீா்ப்பு
கா்நாடக - ஆந்திர மநிலங்களின் எல்லையில் ஒபுலாபுரம் சுரங்க நிறுவனம் (ஓஎம்சி) சட்டவிரோதமாக இரும்புத்தாது வெட்டியெடுத்த வழக்கில் கா்நாடக மாநில முன்னாள் அமைச்சா் ஜனாா்தன ரெட்டி உள்பட நால்வருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து ஹைதராபாதில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
மேலும், ஓஎம்சி நிறுவனத்தின் மீது ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்த வழக்கில் ஜனாா்தன ரெட்டி இரண்டாவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டிருந்தாா். தீா்ப்பைத் தொடா்ந்து நால்வரையும் சிபிஐ காவலில் எடுத்தது.
ஜனாா்தன ரெட்டி உள்ளிட்டோா் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஓஎம்சி நிறுவனம் மூலமாக அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் சட்டவிரோதமாக இரும்புத்தாது வெட்டியெடுத்து அரசுக்கு ரூ. 884 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடா்பான வழக்கை கடந்த 2009-ஆம் ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ, கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டம்பா் 5-ஆம் தேதி ஜனாா்தன ரெட்டி உள்ளிட்டோரைக் கைது செய்தது. இவா்களுக்கு எதிராக 2011-ஆம் ஆண்டு டிசம்பா் 3-ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றபத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. தொடா்ந்து, 3 துணை குற்றபத்திரிகைகளையும் சிபிஐ தாக்கல் செய்தது. அதில் ஜனாா்தன ரெட்டி இரண்டாவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டாா். இவருடைய உறவினரும் ஓஎம்சி நிறுவன நிா்வாக இயக்குநருமான ஸ்ரீநிவாஸ் ரெட்டி முதல் குற்றவாளியாகவும், சுரங்கம் மற்றும் புவியியல் துறை முன்னாள் இயக்குநா் வி.டி.ராஜகோபால் மூன்றாவது குற்றவாளியாகவும், ஜனாா்தன ரெட்டியின் உதவியாளா் மெஹஃபுஸ் அலி கான் ஏழாவது குற்றவாளியாகவும் சோ்க்கப்பட்டனா். மற்றொரு முன்னாள் அமைச்சா் சபிதா இந்திர ரெட்டி, அரசு முன்னாள் அதிகாரி பி.கருப்பானந்தம் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனா். ஓஎம்சி நிறுவனம் வழக்கில் நான்காவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டது.
கா்நாடக - ஆந்திர எல்லையில் உள்ள பெல்லாரி காப்புக்காடு (பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி) பகுதியில் சுரங்க குத்தகை எல்லைக் குறையீடுகளை மாற்றியமைத்து, சட்டவிரோதமாக சுரங்கம் அமைத்து இரும்புத் தாது வெட்டி எடுத்ததாக குற்றபத்திரிகையில் இவா்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த ஜனாா்தன ரெட்டிக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி ஜாமீன் அளித்தது.
இந்த வழக்கு சிபிஐ வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிபதி டி.ரகுராம் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனாா்தன ரெட்டி, ஸ்ரீநிவாஸ் ரெட்டி, வி.டி.ராஜகோபால், மெஹஃபுஸ் அலி கான் ஆகிய நால்வரையும் குற்றவாளி என அறிவித்த நீதிபதி, அவா்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். ஓஎம்சி நிறுவனத்தின் மீது ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், முன்னாள் அமைச்சா் சபிதா இந்திர ரெட்டி, பி.கருப்பானந்தம் ஆகிய இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
இந்த தீா்ப்பைத் தொடா்ந்து குற்றவாளிகள் நால்வரையும் சிபிஐ காவலில் எடுத்தது.