செய்திகள் :

சமூக ஆர்வலர் கொலை வழக்கு; குவாரி உரிமையாளர்கள் மீது குண்டாஸ்; ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

post image

விதிமீறல் குவாரிக்கு எதிராக புகார் அளித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூர் அதிமுக-வைச் சேர்ந்தவரும், சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி, திருமயம் பகுதியில் சடவிரோதமாக செயல்படும் கல் குவாரிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளார்.

நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து, குவாரிகளை செயல்படாமல் தடுக்கும் வகையில் உத்தரவு பெற்றார். இதனால் குவாரி உரிமையாளர்கள் அவரை மிரட்டி வந்தனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவிக்லை. கடந்த ஜனவரி 17 ஆம் தேதி பள்ளிவாசலுக்கு சென்றுவிட்டு டூவீலரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது டிப்பர் லாரி மோதி ஜெகபர் அலி இறந்தார்.

கொலை செய்யப்பட்ட ஜகபர் அலி

இது திட்டமிட்ட கொலைதான் என்று பல்வேறு கட்சியினரும், மனித உரிமை அமைப்பினரும் தீவிர போராட்டம் நடத்திய பிறகு மிரட்டல் விடுத்த கல் குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமய்யா, தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், டிரைவர் காசிநாதன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அதன் பின்பு வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. முருகானந்தம், ராமய்யா, ராசு ஆகியோர் கடந்த பிப்ரவரி 22 -ல் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டனர்.

தங்கள் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி மேற்படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரணை நடத்தியதில் "குண்டர் தடுப்பு சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டதில் சட்டப்பூர்வ நடைமுறை மீறப்படவில்லை, மனுக்கள் பரிசீலனைக்கு தகுதியற்றவை என்பதால் தள்ளுபடி செய்யப்படுகின்றன" என்று உத்தரவிடப்பட்டது.

டிஜிட்டல் கைது: "மகனின் திருமணம் நல்லபடியாக நடக்கணும்னுதான்" - பெங்களூரு பெண்ணிடம் ரூ.32 கோடி மோசடி

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் முதியவர்களை ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. கைது செய்ய வீட்டிற்கு போலீஸாரை அனுப்புவோம் என்று பெண்களை மிர... மேலும் பார்க்க

சேலம்: திருமணம் தாண்டிய உறவு விவகாரத்தில் கொலை - 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி(60). கடந்த 2000-ம் ஆண்டு நல்லதம்பிக்கு 35 வயது இருந்தபோது, உம்பிளிக்கம்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: பட்டியல் சமூக மாணவரை தாக்கிய மாற்று சமூக மாணவர்கள் - அரசு விடுதியில் அரங்கேறிய அவலம்

ராமநாதபுரம் அம்மா பூங்கா பகுதியில் மாணவர்களுக்கான அரசு சமூக விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு சமுதாயத்தினை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகி... மேலும் பார்க்க

``டெல்லியில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல்'' - NIA விசாரணை என்ன சொல்கிறது?

டெல்லியில் கடந்த வாரம் செங்கோட்டை அருகில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பில், வெடிகுண்டு இருந்த காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் உல் நப... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ``திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' - பெற்றோர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் பூனம்ராம். இவரது மனைவி சுமன். சுமனுக்கு அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருந்தது.ஆனால், பூனத்தின் சகோதரிகள் ரமேஷ்வரி, மம்தா, கீதா, மஞ்சு... மேலும் பார்க்க

காங்கேயம்: சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை; போலி வார்டன் போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்குப் பின்புறம் தமிழக அரசின்... மேலும் பார்க்க