செய்திகள் :

சமூக ஆர்வலர் கொலை வழக்கு; குவாரி உரிமையாளர்கள் மீது குண்டாஸ்; ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

post image

விதிமீறல் குவாரிக்கு எதிராக புகார் அளித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூர் அதிமுக-வைச் சேர்ந்தவரும், சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி, திருமயம் பகுதியில் சடவிரோதமாக செயல்படும் கல் குவாரிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளார்.

நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து, குவாரிகளை செயல்படாமல் தடுக்கும் வகையில் உத்தரவு பெற்றார். இதனால் குவாரி உரிமையாளர்கள் அவரை மிரட்டி வந்தனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவிக்லை. கடந்த ஜனவரி 17 ஆம் தேதி பள்ளிவாசலுக்கு சென்றுவிட்டு டூவீலரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது டிப்பர் லாரி மோதி ஜெகபர் அலி இறந்தார்.

கொலை செய்யப்பட்ட ஜகபர் அலி

இது திட்டமிட்ட கொலைதான் என்று பல்வேறு கட்சியினரும், மனித உரிமை அமைப்பினரும் தீவிர போராட்டம் நடத்திய பிறகு மிரட்டல் விடுத்த கல் குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமய்யா, தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், டிரைவர் காசிநாதன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அதன் பின்பு வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. முருகானந்தம், ராமய்யா, ராசு ஆகியோர் கடந்த பிப்ரவரி 22 -ல் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டனர்.

தங்கள் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி மேற்படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரணை நடத்தியதில் "குண்டர் தடுப்பு சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டதில் சட்டப்பூர்வ நடைமுறை மீறப்படவில்லை, மனுக்கள் பரிசீலனைக்கு தகுதியற்றவை என்பதால் தள்ளுபடி செய்யப்படுகின்றன" என்று உத்தரவிடப்பட்டது.

திருப்பூர்: பட்டா மாறுதலுக்கு ரூ. 40 ஆயிரம் லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலர் கைது; சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள சந்தவநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. தையல் தொழிலாளரான இவர் தனது தோட்டத்துக்கு வாரிசு அடிப்படையில், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ண... மேலும் பார்க்க

கேரளா: மகன், மருமகள், பேத்திகளை வீட்டில் பூட்டி தீவைத்து கொன்ற 82 வயது முதியவருக்கு தூக்குத் தண்டனை

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழ அருகே உள்ள சீனிக்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஹமீது (82). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் முகமது பைசல் (45), மருமகள் ஷீபா (40), பேத்திகள் மெஹ்ரா (17)... மேலும் பார்க்க

காரின் மீது சிறுநீர் கழித்த நபரை கண்டித்த இந்திய வம்சாவளி அடித்துக்கொலை - கனடாவில் அதிர்ச்சி

கனடாவின் எட்மண்டனில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தவர் அர்வி சிங் சாகூ (55). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இந்த நிலையில், அக்டோபர் 19-ம் தேதி அர்வி சிங் சாகூவும் அவரது மனைவிய... மேலும் பார்க்க

மேயர், அவரின் கணவர் படுகொலை வழக்கு - 5 பேருக்கு மரண தண்டனை விதிப்பு; ஹைஅலர்ட்டில் சித்தூர்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாநகராட்சியில் கடந்த 2015-ம் ஆண்டு மேயராக இருந்தவர் அனுராதா. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவரின் கணவர் கட்டாரி மோகன். கடந்த 17-11-2015 ஆம் ஆண்டு மாநகராட்சி அலுவலகத்தில... மேலும் பார்க்க

கரூர் : சம்பவ இடத்தில் வீடியோ ஆதாரங்கள், நவீன கேமராக்களுடன் சி.பி.ஐ விசாரணை!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்தகொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்... மேலும் பார்க்க

மும்பை: கழிவறை ஜன்னலை உடைத்து கடத்தல் நபரை சுட்டுக் கொன்ற போலீஸ்; 17 குழந்தைகள் பத்திரமாக மீட்பு!

மும்பை பவாய் பகுதியில் உள்ள பி.ஆர்.ஸ்டூடியோவில் வெப் சீரிஸ் ஒத்திகைக்காக மும்பை, நவிமும்பை, கோலாப்பூர், சாங்கிலி, சதாரா போன்ற இடங்களில் இருந்து 100 குழந்தைகள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அக்குழந்தைகளுக... மேலும் பார்க்க