செய்திகள் :

தாம்பத்திய உறவின்போது பெண்கள் ஏன் பேசணும்னா? | காமத்துக்கு மரியாதை - 264

post image

கணவனும் மனைவியும் உறவுகொள்கையில் பேச வேண்டும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். பேசுவதால் என்ன பலன் என்றோம்.

தாம்பத்திய உறவு அப்போ பெண்கள் ஏன் பேசணும்னா...
தாம்பத்திய உறவு அப்போ பெண்கள் ஏன் பேசணும்னா...

''பல நேரங்களில் உறவின்போது, பெண்கள் தங்கள் கணவரிடம் பேசுவதே இல்லை. 'என்னைத் திருப்திப்படுத்த வேண்டியது கணவரோட வேலை. ஆனா, என்னை அங்க, இங்கன்னு தொடக்கூடாது. செக்ஸ் பண்றப்போ பேசுறதுக்கும் எனக்கு பிடிக்காது. கூச்சமா இருக்கும்' என்பார்கள். இத்தனைக் குழப்பமான மனநிலையில இருக்கிற பெண்களுக்கு உச்சக்கட்டம் கிடைக்காவிட்டால் கோபம் வரும். ஆனால், அந்தக் கோபத்தால் எந்தத் தீர்வும் கிடைக்காது என்பதே உண்மை. தீர்வு பேசுவதில்தான் இருக்கிறது.

'என் மனைவிக்கு பெண்ணுறுப்பைத் தொட்டா பிடிக்கல. ஆனா, உச்சக்கட்டமே வரலைன்னு சொல்றாங்க. நான் வேற என்னதான் பண்றது டாக்டர்'னு கேட்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.

தாம்பத்திய உறவு அப்போ பெண்கள் ஏன் பேசணும்னா...
தாம்பத்திய உறவு அப்போ பெண்கள் ஏன் பேசணும்னா...

ஓர் ஆண், தன் மனைவியை உச்சக்கட்டம் அடைய வைக்க வேண்டுமென்றால், 14 நிமிடங்கள் விடாமல் தூண்ட வேண்டும். இது எங்கோ ஒரு கணவனுக்குத்தான் சாத்தியம். எல்லா ஆண்களாலும் இது முடியாது. அதற்குள் விந்து வந்துவிடும். அதனால், தனக்கு என்ன வேண்டும், எப்படி செய்தால் பிடிக்கிறது, எதை ரொம்ப விரும்புகிறேன் என்பதை ஒரு பெண் சொன்னால் மட்டுமே கணவனுக்குத் தெரியும்.

'செக்ஸ் வெச்சுக்கிறப்போ பேச சங்கடமா இருக்கு' என்று நினைக்கிற பெண்கள், அதற்கு முன்னரே 'குளிச்சிட்டு வாங்க; பல் தேய்ச்சிட்டு வாங்க; நான் இந்த டிரெஸ் போட்டுக்கவா' என்பதுபோல பேசலாம். இப்படிப் பேச, பேச ஒருகட்டத்தில் தாம்பத்திய உறவில் இது பிடித்திருக்கிறது, இது பிடிக்கவில்லை என்பதுபோல பேச ஆரம்பிக்கலாம்.

இப்போது நான் சொல்லியிருப்பதெல்லாம் எல்லோருக்கும் பொதுவானது. தாம்பத்திய உறவு தரும் உணர்வுகள், அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அது ப்யூர்லி பர்சனல். மருத்துவர்கள் நாங்கள் பொதுவாகச் சொல்கிற விஷயங்களும் சில உதவும் என்றாலும், உங்கள் கணவருக்கும் உங்களுக்குமான தனிப்பட்ட பேச்சுக்கள் என்று இருக்கும். அவற்றை உறவின்போது பேசுங்கள்...'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

இதற்காகவெல்லாம் உங்கள் தாம்பத்திய இன்பத்தை இழக்காதீர்கள்! | காமத்துக்கு மரியாதை -263

''மிகவும் சின்ன விஷயமாக இருக்கும். ஆனால், மனம் விட்டுப் பேசாததால் கணவன் - மனைவிக்கு இடையே அது மிகப்பெரிய பிரச்னையாக மாறி நிற்கும். அப்படியொரு பிரச்னையுடன் தான் அந்த தம்பதியினர் என்னை சந்திக்க வந்திருந... மேலும் பார்க்க

சுகப்பிரசவம்; சிசேரியன் - எத்தனை நாட்கள் கழித்து உறவு கொள்ளலாம்? | காமத்துக்கு மரியாதை 262

குழந்தை பிறந்த பிறகு எத்தனை நாள் அல்லது எத்தனை வாரம் அல்லது எத்தனை மாதம் கழித்து உறவுக்கொள்ளலாம் என்கிற சந்தேகம் பலருக்கும்இருக்கிறது. அதற்கான பதிலை சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்... மேலும் பார்க்க

கணவன், மனைவி இருவருக்குமே உதவும் வைப்ரேட்டர் காண்டம்! - காமத்துக்கு மரியாதை 261

''கர்ப்பமாவதை தடுப்பதற்கும், பால்வினை நோய்கள் வராமல் தடுப்பதற்கும் மட்டுமே காண்டம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? இல்லவே இல்லை. இப்போது விறைப்புத்தன்மைக்காகவும், இன்பத்துக்காகவும்கூட காண்டம் பயன... மேலும் பார்க்க

வெறி நாய் கடிக்கும் - ஆணுறுப்புக்கும் என்ன தொடர்பு? விளக்கும் மருத்துவர் - காமத்துக்கு மரியாதை 260

வெறி நாய்க்கடிக்கும் ஆணுறுப்புக்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கிறது என்கிற, சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ் அதுபற்றி இங்கே விளக்குகிறார். ரேபிஸ் வைரஸுக்கும் ஆணுறுப்புக்கும் என்னத் தொட... மேலும் பார்க்க