செய்திகள் :

சாதிவாரி கணக்கெடுப்பில் ஹிந்துக்களை பிரிக்கிறது காங்கிரஸ்: பாஜக

post image

கர்நாடகத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அதிகாரப்பூர்வமானது அல்ல என பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். அசோகா குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் செய்தியாளர்களுடன் அசோகா பேசியதாவது,

''கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு மதமாற்றத்தை ஊக்குவிக்கிறது. சாதிகளை பிரித்து கணக்கெடுப்பதே சாதிவாரி கணக்கெடுப்பு. ஆனால், சித்தராமையா இதனை மதமாற்றம் செய்வதற்கான வாய்ப்பாக இதனை உருவாக்கியுள்ளார்.

வொக்காலிகா, தலித் மற்றும் விஸ்வகர்மா உள்ளிட்ட 52 சமூகத்தைச் சேர்ந்தவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றப்படுகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை அவர்களுக்கு ஏற்ப எண்ணிக்கையை அதிகரித்தோ அல்லது குறைத்தோ காட்டுகின்றனர்.

கிறிஸ்தவம், இஸ்லாமியத்தில் பல சமூகத்தினர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் தங்களை வெளிப்படுத்தவில்லை. ஹிந்து மதத்தில் அடக்குமுறை உள்ளதாக சித்தராமையா கூறுகிறார். ஆனால், பெண்கள் மசூதிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் கட்டாயம் புர்கா அணிய வேண்டும். இதுபோன்ற மதம் சார்ந்த நம்பிக்கைகளும் அடக்குமுறைக்குள் வருவதில்லையா?'' எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், ''கர்நாடகத்தில் அதிகபட்சமாக லிங்காயத்துகளும் இதற்கு அடுத்தபடியாக வொக்காலிகா சமூகத்தினரும் உள்ளனர். இந்த விகிதத்தை சித்தராமையா மாற்றப்பார்க்கிறார். வொக்காலிகா சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தி பிரிக்கப் பார்க்கிறார். புதிய சாதியை உருவாக்குகிறார்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | பிகார் தேர்தல்: தேஜஸ்வி யாதவ் முதல்வர் அல்ல!

K'taka CM Siddaramaiah's dictated caste survey not official BJP

பெண் எம்.பி.யின் விடியோ இணையத்தில் வெளியீடு? சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

மாநிலங்களவை பெண் எம்.பி.யின் விடியோ இணையத்தில் வெளியானதாக இணைய வழியில் மிரட்டல் விடுத்த மர்மநபரைக் கண்டுபிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். பெங்களூரில் வசிக்கும் மாநிலங்களவை உறுப்பினர் சுத... மேலும் பார்க்க

புகைப்பிடித்தல் காட்சியால் சர்ச்சை: ரன்பீர் கபூர் மீது நடவடிக்கை?

ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் மீது நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.தடை செய்யப்பட்ட இ-சிகரெட்களை சினிமா காட்சிகளில் பயன்படுத்தியதற்காக நடிகர் ரன்பீர் கபூர், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம... மேலும் பார்க்க

ராபின் உத்தப்பாவிடம் அமலாக்கத் துறை விசாரணை!

புது தில்லி: அமலாக்கத்துறை விசாரணைக்குப் பின் முன்னாள் கிரிகெட் வீரர் ராபின் உத்தப்பா வீட்டுக்கு திரும்பினார். சட்டவிரோதமாகச் செயல்படும் செயலி ஒன்றின் மீதான புகாரில் ராபின் உத்தப்பாவுக்கு தொடர்பிருப்ப... மேலும் பார்க்க

மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் உடலுக்கு 2-ஆவது முறையாக பிரேதப் பரிசோதனை!

மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் உடலுக்கு 2-ஆவது முறையாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அஸ்ஸாமி, ஹிந்தி உள்பட 40 மொழிகளில் ஹிட் பாடல்களைப் பாடி ரசிகர்கள் நெஞ்சில் தனி இடம்பிடித்தவர் அஸ்ஸாமைச் சேர்ந்த பா... மேலும் பார்க்க

பிகார் தேர்தல்: தேஜஸ்வி யாதவ் முதல்வர் அல்ல!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் முதல்வர் முகமாக பார்க்கப்படவில்லை என லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) தலைவரும் எம்.பி.யுமான சிராக் பாஸ்வன் தெரிவித்துள்ளார். பிகாரில் செய்தியாளர்களுடன் அவர் பேசி... மேலும் பார்க்க

தங்கள் மீதான ரூ.100 கோடி திருட்டு வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி ஒய்எஸ்ஆர் காங். அமித் ஷாவுக்கு கடிதம்!

திருப்பதி திருமலைக் கோவிலில் பக்தர்கள் செலுத்திய பரகாமணி காணிக்கையில் ரூ. 100 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக அளிக்கப்பட்டுள்ள புகாரில் சிபிஐ விசாரணை நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி தேவஸ... மேலும் பார்க்க