செய்திகள் :

சாய் சுதர்சனுக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் பாராட்டு!

post image

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.

இதையும் படிக்க: கேகேஆர் பேட்டர்களிடம் நம்பிக்கை குறைவாக உள்ளது: டுவைன் பிராவோ

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ஷுப்மன் கில் 90 ரன்களும், சாய் சுதர்சன் 52 ரன்களும் எடுத்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சாய் சுதர்சன் அந்த அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்து வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 417 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அம்பத்தி ராயுடு பாராட்டு

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்து வரும் சாய் சுதர்சனை சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அம்பத்தி ராயுடு (கோப்புப் படம்)

இதையும் படிக்க: தமிழக வீரரிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்: ரஷித் கான்

சாய் சுதர்சன் குறித்து அம்பத்தி ராயுடு பேசியதாவது: சாய் சுதர்சன் விளையாடுவதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நவீன கால கிரிக்கெட் வளர்ந்துவிட்டபோதிலும், பாரம்பரிய ஸ்டைலில் ரன்கள் குவிக்க முடியும் என்பதை அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். அவர் ஸ்மார்ட் கிரிக்கெட் விளையாடுகிறார். அவரது ஸ்மார்ட்டான கிரிக்கெட் அவருடைய நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது என்றார்.

ராகுல், பொரெல் அசத்தல்; டெல்லிக்கு 6-ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 6 விக்கெட்ட... மேலும் பார்க்க

முகேஷ் குமார் வேகத்தில் லக்னௌ திணறல்: தில்லிக்கு 160 ரன்கள் இலக்கு!

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணி 160 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடர் லீக் சுற்றின் 40-வது போட்டியில் தில்லி மற்றும் லக்னௌ அணிகள் விளையாடுகின்றன. உத்தரப் பிரதேச... மேலும் பார்க்க

பிட்ச் மேற்பார்வையாளரை விமர்சித்ததால் தடை செய்யப்பட்ட வர்ணனையாளர்கள்!

ஈடன் கார்டன்ஸ் பிட்ச் மேற்பார்வையாளரை விமர்சித்ததால் வர்ணனையாளர்கள் ஹர்ஷா போக்லே, சைமன் டௌலை சிஏபி தடை விதித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈடன் கார்டன்ஸ் பிட்ச் கொல்கத்தா அணிக்கு சாத... மேலும் பார்க்க

டாஸ் வென்று தில்லி பந்துவீச்சு: தாக்குப் பிடிக்குமா லக்னௌ?

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. மேலும் பார்க்க

கேகேஆர் பேட்டர்களிடம் நம்பிக்கை குறைவாக உள்ளது: டுவைன் பிராவோ

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டர்களிடம் நம்பிக்கை குறைவாக உள்ளதாக அந்த அணியின் ஆலோசகர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா... மேலும் பார்க்க

தமிழக வீரரிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்: ரஷித் கான்

தமிழக வீரர் சாய் கிஷோரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புவதாக பிரபல ஆப்கன் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2025 சீசனில் புள்ளிப் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் இருக்கிறது. பேட்டி... மேலும் பார்க்க