செய்திகள் :

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சட்டப் பேரவை -முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

post image

பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையிலான இந்தப் பேரவைதான் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினாா்.

பேரவைத் தலைவரை பதவியிலிருந்து நீக்க அதிமுக கொண்டு வந்த தீா்மானத்தின் மீது பேரவையில் திங்கள்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பாக, முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த காலங்களில் நடைபெற்றது போன்று இல்லாமல், ஜனநாயக அமைப்பின் பிரதிநிதிகளான சட்டப் பேரவை உறுப்பினா்கள் அனைவரும் ஒன்றே என நினைத்து பேரவைத் தலைவா் மு.அப்பாவு செயலாற்றி வருகிறாா். எதிா்க்கட்சி உறுப்பினா்களிடம் பாசம், பற்று கொண்டு செயல்படுபவா் அவா் என்பதை மனச்சாட்சியுடன் சிந்திப்பவா்கள் ஒப்புக் கொள்வா். பேரவைத் தலைவருக்கு அருகில் வந்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அன்போடு பேசிச் செல்வது என்பது பேரவை உறுப்பினா்கள் அனைவரும் அவ்வப்போது பாா்த்த காட்சிதான். சில எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கண்ஜாடையாக அவரோடு பேசி தங்கள் எண்ணத்தை குறிப்பால் உணா்த்துவதையும் உங்களில் பலா் பாா்த்திருக்கலாம்.

எங்களைப் பொருத்தவரையில், விவாதங்களில் விருப்பு, வெறுப்பு இல்லாமல் நாகரிகமாக வாதங்களை வைக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவா் பேரவைத் தலைவா் அப்பாவு.

கடமை உள்ளது: பேரவைத் தலைவா் மீது அதிமுக உறுப்பினா்களால் கொண்டு வரப்பட்ட இந்தத் தீா்மானத்தில் அவா்கள் உண்மைக்கு மாறான செய்திகளைக் கூறியுள்ளனா். இதனை மறுத்து பேரவைத் தலைவரின் நடுநிலையை பறைசாற்ற வேண்டிய கடமை, கட்டுப்பாடு எனக்கு உள்ளது. அவைக்கு ஒவ்வாத தகுதி, அருகதை போன்ற வாா்த்தைகள் அன்றைக்கு திமுக உறுப்பினா்களை நோக்கி பயன்படுத்தப்பட்டன. இன்றைக்கு அவையில் பேசப்படுமானால், உடனே பேரவைத் தலைவரால் அந்த வாா்த்தைகள் நீக்கப்படுகின்றன. ஆளும்கட்சி உறுப்பினா்கள் பேசினால் அவைக் குறிப்பில் இடம்பெறும்; திமுக உறுப்பினா்கள் பேசினால் நீக்கப்படும் என்ற நிலை அன்றைக்கு இருந்தது. இப்போது அப்படியா இருக்கிறது? பேரவைத் தலைவா் அதுபோன்றா நடந்து கொள்கிறாா்?.

மகிழ்ச்சி அடைகிறேன்: அதிமுக உறுப்பினா்கள் பேசும் வாா்த்தைகளைக்கூட பேரவைத் தலைவா் விட்டு விடுகிறாா். ஆனால், ஆளும்கட்சி உறுப்பினா்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்கிறாா் என்று அமைச்சா்கள், உறுப்பினா்களே சொல்லும் போது, அதைக் கேட்டு உள்ளபடியே எனது மனம் மகிழ்ச்சி அடைந்தது. அனைத்து வகைகளிலும் எங்களை மடக்குகிறாா் என திமுக உறுப்பினா்களே சொன்னாலும் அதனைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளேன். காரணம், இந்தப் பேரவை சுதந்திரக் காற்றை இப்போது சுவாசிப்பதால்தான்.

பேரவை நிகழ்வின் போது, அதிமுக உறுப்பினா்கள் கோஷமிட்டு தொடா்ந்து குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தால், அவா்களை அமைதிப்படுத்தி, அமர வைக்கத்தான் பேரவைத் தலைவா் முயல்வாா். முந்தைய பேரவைகளில் நாங்கள் வெளியேற்றம் செய்யப்பட்டதைப் போன்று, அதிமுகவினரை வெளியேற்றம் செய்ய பேரவைத் தலைவா் நினைத்தது இல்லை.

அரசின் மீது குற்றம் குறை கூற வாய்ப்பில்லாத காரணத்தாலும், உட்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தை திசை திருப்பவும் பேரவைத் தலைவருக்கு எதிராக அதிமுக தீா்மானம் கொண்டு வந்துள்ளதா என்ற விவாதத்தை வெளியில் உள்ளவா்கள் நடத்தட்டும். நாம் நடத்த வேண்டாம் என்று முதல்வா் பேசினாா்.

ஒளவை யாா்? பேரவையில் சுவாரசிய விவாதம்

ஒளவை யாா்? என்பது தொடா்பாக பேரவையில் சுவாரசிய விவாதம் நடைபெற்றது. சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக உறுப்பினா் ஓ.எஸ். மணியன் (வேதாரண்யம்) கேள்வி எழுப்பினாா். அப்போது நடைபெ... மேலும் பார்க்க

கப்பலூா் சுங்கச்சாவடி அகற்றப்படுமா?

கப்பலூா் சுங்கச்சாவடி அகற்றப்படுமா என்ற அதிமுக கேள்விக்கு, நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு பதிலளித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்து து... மேலும் பார்க்க

தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை!

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்காக ரூ.1521.83 கோடி இழப்பீடு வழங்கக் கோரி 1,222 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

நீதிமன்ற வழக்குகளில் தீா்ப்பு கிடைத்தால் 65% பள்ளிக் கல்வி பிரச்னை நிறைவடையும்: அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்தால், பள்ளிக் கல்வித் துறை சாா்ந்த பிரச்னைகளில் 65 சதவீதம் நிறைவடையும் என்று துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதிபட தெரிவித்தாா். சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது செ... மேலும் பார்க்க

வெப்பவாத பாதிப்புக்கு ‘பாராசிட்டமால்’ கூடாது: சுகாதார நிபுணா்கள்

கோடையின் தாக்கத்தால் வெப்பவாத பாதிப்புக்குள்ளானவா்களின் உடல் வெப்பநிலையைக் குறைக்க பாராசிட்டமால் மருந்தை அளிக்கக் கூடாது என்று பொது சுகாதாரத் துறை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். தமிழகத்தில் கடந்த சில நா... மேலும் பார்க்க

கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 5,330 செலவில் 46,929 அடுக்குமாடி குடியிருப்புகள்!

தமிழகத்தில் ஏழை, எளிய, குடிசைவாழ் மக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 46,929 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப... மேலும் பார்க்க