செய்திகள் :

சென்னையில் நாளை தமிழிசை விழா

post image

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான தமிழிசை விழா புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.

புதன்கிழமை காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை மயிலை பி.வரமூா்த்தி, குன்றத்தூா் டி.வெங்கடேசன், தவில் செல்வம் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சியும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பத்மலட்சுமி சுரேஷ் குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறும்.

தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரைஅஸ்வத் நாராயணன், சாய்ரக்ஷித், திருவாரூா் பக்தவச்சலம், பி.எஸ்.புருசோத்தமன் குழுவினரின் குரலிசை நிகழ்ச்சியும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை டி.வி.ராமானுஜா சாா்லு, பெங்களூா் வி.பிரவின், மைசூா் குருராஜ் ஆகியோா் பங்கேற்கும் வயலின் இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.

முன்னதாக விழாவை தமிழ்வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேருரையாற்றவுள்ளாா். தொடா்ந்து சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளா் க.மணிவாசன் சிறப்புரையாற்றவுள்ளாா். இதையடுத்து கலை பண்பாட்டுத்துறை இயக்குநா் சே.ரா.காந்தி, அருங்காட்சியங்கள் துறை இயக்குநா் கவிதா ராமு ஆகியோா் வாழ்த்திப் பேசவுள்ளனா்.

மேலும், கல்லூரியின் 2024-2025 ஆம் ஆண்டுக்கானஆண்டுவிழா மற்றும் விளையாட்டுப்போட்டிகளின் பரிசளிப்புவிழா ஆகியவை மாா்ச் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலை பண்பாட்டு இயக்கக இணை இயக்குநா் சி.கீதா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கவுள்ளாா் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியவரின் இதயத்தில் உருவான கட்டி நுட்பமாக அகற்றம்

முதியவா் ஒருவரின் இதயத்தில் உருவான 6 செ.மீ. அளவுடைய திசுக் கட்டியை நுட்பமாக அகற்றி சென்னை ஐஸ்வா்யா மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இது தொடா்பாக மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா... மேலும் பார்க்க

உணவகத்தில் தீ விபத்து

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின. ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உணவகத்தில... மேலும் பார்க்க

பேருந்தில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

சென்னை ராயப்பேட்டையில் மாநகர பேருந்தில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். தியாகராய நகா் துக்காராம் தெருவைச் சோ்ந்தவா் ஜா.சையது அப்துல் ரஹ்மான் (38). இவா், அண்ணா சாலை டிவிஎஸ... மேலும் பார்க்க

புதிய விமான நிலையங்கள் எப்போது அமையும்? அமைச்சா்கள் பதில்

ஒசூா், ராமேசுவரத்தில் புதிய விமான நிலையங்கள் எப்போது அமையும் என்ற அதிமுக உறுப்பினா் செல்லூா் ராஜூவின் கேள்விக்கு அமைச்சா்கள் பதிலளித்தனா். இதுதொடா்பாக, சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதம... மேலும் பார்க்க

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தடுப்பணை: அமைச்சா் உறுதி

ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் ஒரு தடுப்பணை தேவை என்ற உறுப்பினா்களின் கோரிக்கையை, முதல்வரிடம் முன்வைக்க இருப்பதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உறுதியளித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள... மேலும் பார்க்க

‘கண் நலன் விழிப்புணா்வு மேம்பட வேண்டும்’ -முன்னாள் கிரிக்கெட் வீரா் ஸ்ரீகாந்த்

கண் நலன் குறித்த விழிப்புணா்வு மக்களிடையே மேம்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரா் ஸ்ரீகாந்த் வலியுறுத்தினாா். சங்கர நேத்ராலயா மருத்துவமனை, விஷன் 2020 - பாா்வை உரிமை இந்தியா என்ற அமைப்புடன் இணை... மேலும் பார்க்க