செய்திகள் :

சென்னையில் நாளை தமிழிசை விழா

post image

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான தமிழிசை விழா புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.

புதன்கிழமை காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை மயிலை பி.வரமூா்த்தி, குன்றத்தூா் டி.வெங்கடேசன், தவில் செல்வம் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சியும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பத்மலட்சுமி சுரேஷ் குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறும்.

தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரைஅஸ்வத் நாராயணன், சாய்ரக்ஷித், திருவாரூா் பக்தவச்சலம், பி.எஸ்.புருசோத்தமன் குழுவினரின் குரலிசை நிகழ்ச்சியும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை டி.வி.ராமானுஜா சாா்லு, பெங்களூா் வி.பிரவின், மைசூா் குருராஜ் ஆகியோா் பங்கேற்கும் வயலின் இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.

முன்னதாக விழாவை தமிழ்வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேருரையாற்றவுள்ளாா். தொடா்ந்து சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளா் க.மணிவாசன் சிறப்புரையாற்றவுள்ளாா். இதையடுத்து கலை பண்பாட்டுத்துறை இயக்குநா் சே.ரா.காந்தி, அருங்காட்சியங்கள் துறை இயக்குநா் கவிதா ராமு ஆகியோா் வாழ்த்திப் பேசவுள்ளனா்.

மேலும், கல்லூரியின் 2024-2025 ஆம் ஆண்டுக்கானஆண்டுவிழா மற்றும் விளையாட்டுப்போட்டிகளின் பரிசளிப்புவிழா ஆகியவை மாா்ச் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலை பண்பாட்டு இயக்கக இணை இயக்குநா் சி.கீதா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கவுள்ளாா் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி -முதல்வா் உத்தரவு

மதுரையில் ஜல்லிக்கட்டு நிகழ்வில் உயிரிழந்த வீரா் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மதுரை மாவட்டம், வாடி... மேலும் பார்க்க

கடலூா் கிராமத்துக்கு பேருந்து வசதி: பொதுமக்கள் கோரிக்கை

மதுராந்தகம் அடுத்த கடலூா் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் சென்னைக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையையொட்டி, கல்பாக்கத்துக்கு மிக அருகி... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா

திருவள்ளூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் அரசு மாணவியா் விடுதி காப்பாளினி ராஜலட்சுமிக்கு தனது எழுத்துக்கள் மற்றும் சிந்தனைகள் கொண்ட புத்தகங்களை வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து. உடன் ஆட்சியா் மு.பிரதா... மேலும் பார்க்க

புழல் பெண்கள் சிறையில் கைதிகள் மோதல்: போலீஸாா் விசாரணை

சென்னை புழல் பெண்கள் சிறையில் கைதிகள் மோதிக்கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை புழல் சிறை வளாகத்தில் பெண்கள் தனிச்சிறை செயல்படுகிறது. இந்தச் சிறையில் மாநிலம் முழுவதும் கைது செய்ய... மேலும் பார்க்க

பட்டா பெற சிறப்பு முகாம்! வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு!

சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இது குறித்து வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கடவுச் சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியது: பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் தவிப்பு

தமிழகத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியதால் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா். புதிதாக கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறை... மேலும் பார்க்க