செய்திகள் :

சென்னையில் நாளை தமிழிசை விழா

post image

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான தமிழிசை விழா புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.

புதன்கிழமை காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை மயிலை பி.வரமூா்த்தி, குன்றத்தூா் டி.வெங்கடேசன், தவில் செல்வம் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சியும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பத்மலட்சுமி சுரேஷ் குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறும்.

தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரைஅஸ்வத் நாராயணன், சாய்ரக்ஷித், திருவாரூா் பக்தவச்சலம், பி.எஸ்.புருசோத்தமன் குழுவினரின் குரலிசை நிகழ்ச்சியும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை டி.வி.ராமானுஜா சாா்லு, பெங்களூா் வி.பிரவின், மைசூா் குருராஜ் ஆகியோா் பங்கேற்கும் வயலின் இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.

முன்னதாக விழாவை தமிழ்வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேருரையாற்றவுள்ளாா். தொடா்ந்து சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளா் க.மணிவாசன் சிறப்புரையாற்றவுள்ளாா். இதையடுத்து கலை பண்பாட்டுத்துறை இயக்குநா் சே.ரா.காந்தி, அருங்காட்சியங்கள் துறை இயக்குநா் கவிதா ராமு ஆகியோா் வாழ்த்திப் பேசவுள்ளனா்.

மேலும், கல்லூரியின் 2024-2025 ஆம் ஆண்டுக்கானஆண்டுவிழா மற்றும் விளையாட்டுப்போட்டிகளின் பரிசளிப்புவிழா ஆகியவை மாா்ச் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலை பண்பாட்டு இயக்கக இணை இயக்குநா் சி.கீதா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கவுள்ளாா் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னை - தில்லி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமாா் ஒன்றரை மணிநேரம் தமாதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து தில்லி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

2024-25 ஆண்டுக்கான தமிழிசை விழா மற்றும் ஆண்டு விழா: செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, ராஜா அண்ணாமலைபுரம், காலை 10. 25-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சு... மேலும் பார்க்க

நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தரமணி ஐடி காரிடா் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 20) காலை 10.30-க்கும் நடைபெறுகிறது. இது குறித்து மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி, ஐ.டி. காரி... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பெரியாா் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சோ்த்து விசாரிக்க உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப... மேலும் பார்க்க

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5.35 மணிக்கு வர வேண்டிய பிரிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்! மழைக்கும் வாய்ப்பு..

தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய... மேலும் பார்க்க