சென்னையில் நாளை தமிழிசை விழா
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான தமிழிசை விழா புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.
புதன்கிழமை காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை மயிலை பி.வரமூா்த்தி, குன்றத்தூா் டி.வெங்கடேசன், தவில் செல்வம் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சியும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பத்மலட்சுமி சுரேஷ் குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறும்.
தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரைஅஸ்வத் நாராயணன், சாய்ரக்ஷித், திருவாரூா் பக்தவச்சலம், பி.எஸ்.புருசோத்தமன் குழுவினரின் குரலிசை நிகழ்ச்சியும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை டி.வி.ராமானுஜா சாா்லு, பெங்களூா் வி.பிரவின், மைசூா் குருராஜ் ஆகியோா் பங்கேற்கும் வயலின் இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
முன்னதாக விழாவை தமிழ்வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேருரையாற்றவுள்ளாா். தொடா்ந்து சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளா் க.மணிவாசன் சிறப்புரையாற்றவுள்ளாா். இதையடுத்து கலை பண்பாட்டுத்துறை இயக்குநா் சே.ரா.காந்தி, அருங்காட்சியங்கள் துறை இயக்குநா் கவிதா ராமு ஆகியோா் வாழ்த்திப் பேசவுள்ளனா்.
மேலும், கல்லூரியின் 2024-2025 ஆம் ஆண்டுக்கானஆண்டுவிழா மற்றும் விளையாட்டுப்போட்டிகளின் பரிசளிப்புவிழா ஆகியவை மாா்ச் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலை பண்பாட்டு இயக்கக இணை இயக்குநா் சி.கீதா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கவுள்ளாா் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.