செய்திகள் :

சேரன் விரைவு ரயிலில் ஏசி பழுது: அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணி

post image

சென்னை: சேரன் விரைவு ரயிலின் ஏசி வகுப்பு பெட்டியில் குளிா்சாதன இயந்திரம் வேலை செய்யாததால், பயணி ஒருவா் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினாா்.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு, தினமும் இரவு 10 மணிக்கு, சேரன் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. வழக்கம்போல், ஞாயிற்றுக்கிழமை இரவு ரயில் புறப்படத் தயாராக இருந்த போது, இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் குளிா்சாதன இயந்திரம் வேலை செய்யவில்லை. இது குறித்து பயணிகள் ரயில்வே அலுவலா்களிடம் புகாா் அளித்தும் பழுது சரிசெய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்ட்ரலில் இருந்து ரயில் புறப்பட்ட போது, பயணி ஒருவா் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினாா்.

உடனே சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் பெட்டிக்கு வந்து விசாரித்தனா். அப்போது, குளிா்சாதன இயந்திரம் இயங்காதது குறித்து புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினா். அதன்பின், பழுது சரிசெய்யப்பட்டு 55 நிமிஷம் தாமதமாக இரவு 10.55 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 3 பேர் கைது!

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூவர் திங்கள்கிழமை(அக்.21) கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், அபூ... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் செவ்வாய்க்கிழமை மாற்றமில்லை. திங்கள்கிழமை விற்பனையான அதே விலையில் இன்றும் விற்பனையாகிறது.அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, மாற்றமின்றி ஒரு கிரா... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17, 586 கன அடியாக குறைந்தது.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததால் காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 18,094 கன அடி... மேலும் பார்க்க

கனமழை: ஈரோட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக ஈரோட்டில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுவதாக ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந... மேலும் பார்க்க

தீபாவளி: பெங்களூருக்கு சிறப்பு ரயில்

சென்னை: சென்னையில் இருந்து பெங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் ஏற்படு... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற பேராசிரியா்களுடன் துணை முதல்வா் உரையாடல்

சென்னை: ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற தொழில்நுட்பப் பேராசிரியா்கள், சென்னையில் துணை முதல்வா் உதயநிதியுடன் கலந்துரையாடினா்.நான் முதல்வன் திட்டத்தின்கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், பாலிடெ... மேலும் பார்க்க