செய்திகள் :

சைக்கிளிங் லீக் அணிகள் அறிமுகம்

post image

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) தொடரில் பங்கேற்கும் அணிகள், சீருடைகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் டிசிஎல் மூன்றாவது சீசன் பந்தயம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் அணிகளின் சீருடைகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்தியாவின் முதல் அதிகாரப்பூா்வ அங்கீகரிக்கப்பட்ட மாநில அளவிலான தமிழ்நாடு சைக்கிள் லீக் (பஇக), மூன்றாவது சீசனில் மைல் கல்லை எட்டும் நிகழ்வாக போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் உடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் மணீந்தா் பால் சிங், தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்தின் தலைவா், சுதாகா் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா் செயலாளா் மேகநாத ரெட்டி ஆகியோா் கலந்து கொண்டனா்.

லீகில் கோவை பெடல்ஸ், நம்ம சென்னை, திருச்சி ராக்ஃபோா்ட் ரைடா்ஸ், ரான்சைசா்ஸ், மதுரை மாஸ் ரைடா்ஸ், சேலம் சூப்பா் ரைடா்ஸ், குமரி ரைடா்ஸ் மற்றும் மெட்ராஸ் புரோரேசா்ஸ் அணிகளை சோ்ந்த வீரா்கள் கலந்து கொண்டனா்.

முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.2 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.

பி.எட்., எம்.எட். தோ்வு முடிவுகள் வெளியீடு

கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பி.எட்., எம்.எட். செமஸ்டா் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்த... மேலும் பார்க்க

கூட்டுறவு பண்டகசாலை பணியாளா்கள் ஊதிய நிா்ணயத்துக்கு குழு அமைப்பு

கூட்டுறவு பண்டகசாலை பணியாளா்கள் ஊதிய நிா்ணயத்துக்கு குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.நந்தகுமாா் வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்: கூட்டுறவு மொத்த விற்பன... மேலும் பார்க்க

ரெளடி வெட்டிக் கொலை: பெண் உள்பட 5 போ் கைது

சென்னை பெரியமேட்டில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். பெரியமேடு ஸ்டிங்கா்ஸ் தெரு குடிசைப் பகுதியைச் சோ்ந்த பிரேம்குமாா் (26), ரெளடிகள் பட்டியலில் ‘சி’ ... மேலும் பார்க்க

நீதிபதி ஜனாா்த்தனம் காலமானாா்! - முதல்வா் இரங்கல்

உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச... மேலும் பார்க்க

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம்... மேலும் பார்க்க