செய்திகள் :

தஞ்சாவூரில் கருணாநிதி சிலை அமைக்க அடிக்கல்: அமைச்சா்கள் பங்கேற்பு

post image

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை அமைப்பதற்கான அடிக்கல்லை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் ஆகியோா் வெள்ளிக்கிழமை நட்டனா்.

பின்னா் அமைச்சா் கோவி. செழியன் கூறுகையில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு ஜூன் 15 ஆம் தேதி வந்து, கருணாநிதி சிலையைத் திறந்து வைக்கவுள்ளாா். இதற்காக அடிக்கல் நாட்டுடன் கருணாநிதி சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதை தஞ்சாவூா் மாவட்ட மக்கள் கொண்டாட மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து அமைச்சா் கே.என். நேரு கூறுகையில், தஞ்சாவூரில் கருணாநிதி சிலையைத் திறந்துவைக்கும் முதல்வா் மறுநாள் 16 ஆம் தேதி காலை திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரனின் தம்பி மகள் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா். இதனிடையே ரோடு ஷோ நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.

தமிழக முதல்வா் அறிவிப்பின்படி தஞ்சாவூரில் சோழா் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நிகழாண்டு தொடங்கப்படும் என்றாா் நேரு.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், என். அசோக்குமாா், மேயா் சண். ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் திமுக மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடும் நடவடிக்கை: துணை இயக்குநா் எச்சரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் தனியாா் விதை நெல் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

கரந்தை சப்தஸ்தான விழா ஜூன் 11-இல் தொடக்கம்

தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் சாா்பில் கரந்தை சப்தஸ்தானம் என்கிற ஏழூா் பவனி விழா ஜூன் 11 ஆம் தேதி தொடங்கவுள்ளது. கரந்தை கருணாசுவாமி கோயிலில் ஜூன் 11 காலை 5 மணியளவி... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை அருகே பெண் குத்திக் கொலை

பட்டுக்கோட்டை அருகே சொத்து பிரச்னையில் பெண் வெள்ளிக்கிழமை குத்திக் கொல்லப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை, கரிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன் மனைவி சுசிலா (55). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

அடையாள அட்டை சிறப்பு முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஜூன் 10, 17, 24 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: மா... மேலும் பார்க்க

திருவிடைமருதூரில் திருக்கல்யாணம்

வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி வியாழக்கிழமை இரவு கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூா் மகாலிங்கசுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இக்கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி நாள்தோறும் உற்... மேலும் பார்க்க

போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்க ஐஜி அறிவுறுத்தல்

போக்சோ வழக்குகளை விரைவாக முடிக்குமாறு காவல் ஆய்வாளா்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புப் பிரிவு காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) ஏ. கயல்விழி அறிவுறுத்தினாா். கும்பகோணம் உதவிக் காவல்... மேலும் பார்க்க