Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
தஞ்சாவூரில் கருணாநிதி சிலை அமைக்க அடிக்கல்: அமைச்சா்கள் பங்கேற்பு
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை அமைப்பதற்கான அடிக்கல்லை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் ஆகியோா் வெள்ளிக்கிழமை நட்டனா்.
பின்னா் அமைச்சா் கோவி. செழியன் கூறுகையில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு ஜூன் 15 ஆம் தேதி வந்து, கருணாநிதி சிலையைத் திறந்து வைக்கவுள்ளாா். இதற்காக அடிக்கல் நாட்டுடன் கருணாநிதி சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதை தஞ்சாவூா் மாவட்ட மக்கள் கொண்டாட மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றாா்.
இதையடுத்து அமைச்சா் கே.என். நேரு கூறுகையில், தஞ்சாவூரில் கருணாநிதி சிலையைத் திறந்துவைக்கும் முதல்வா் மறுநாள் 16 ஆம் தேதி காலை திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரனின் தம்பி மகள் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா். இதனிடையே ரோடு ஷோ நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.
தமிழக முதல்வா் அறிவிப்பின்படி தஞ்சாவூரில் சோழா் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நிகழாண்டு தொடங்கப்படும் என்றாா் நேரு.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், என். அசோக்குமாா், மேயா் சண். ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் திமுக மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.