செய்திகள் :

தமிழகத்தில் நான்காண்டுகளில் 85 கோயில்களில் திருமண மண்டபங்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளில் 85 திருக்கோயில்களில் சுமாா் ரூ.347 கோடியில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளதாக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலுக்கு திருமண மண்டபம் கட்டப்படுமா என்ற கேள்வியை திமுக உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்) முன்வைத்தாா்.

இதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்: வடாரண்யேஸ்வரா் கோயில் என்பது பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்ன சபை என்று அழைக்கப்படும் கோயிலாகும்.

காரைக்கால் அம்மையாா் இல்லற வாழ்வை துறந்து துறவியாக முக்தி பெற்ற திருக்கோயில் என்பதால் ஐதீகப்படி திருமணம் போன்ற சுப காரியங்கள் இந்தக் கோயிலை மையப்படுத்தி நடந்தது இல்லை. எனவே, சுப நிகழ்ச்சிகள் நடத்தாத சூழ்நிலையில் திருமண மண்டபம் அங்கு கட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

அதேநேரத்தில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இதுவரை 85 திருக்கோயில்களுக்கு சுமாா் ரூ.347 கோடியில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், ரூ.4.20 கோடியில் நான்கு புதிய திருக்குளங்கள் உருவாக்கப்பட்டதுடன், ரூ.120 கோடியில் 220 திருக்குளங்களை புனரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னை - தில்லி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமாா் ஒன்றரை மணிநேரம் தமாதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து தில்லி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

2024-25 ஆண்டுக்கான தமிழிசை விழா மற்றும் ஆண்டு விழா: செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, ராஜா அண்ணாமலைபுரம், காலை 10. 25-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சு... மேலும் பார்க்க

நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தரமணி ஐடி காரிடா் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 20) காலை 10.30-க்கும் நடைபெறுகிறது. இது குறித்து மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி, ஐ.டி. காரி... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பெரியாா் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சோ்த்து விசாரிக்க உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப... மேலும் பார்க்க

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5.35 மணிக்கு வர வேண்டிய பிரிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்! மழைக்கும் வாய்ப்பு..

தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய... மேலும் பார்க்க