செய்திகள் :

"தவெக எனும் புதுக்கட்சியை திமுக வளர விடாது" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

post image

"திமுகவுக்கு டெல்டா மாவட்ட மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். எழுதி வைத்து கொள்ளுங்கள், தமிழகம் முழுதும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியவர், "அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மரியாதை செலுத்துகிறார். முன்னதாக மதுரை தெப்பக்குளம் பகுதியிலுள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

புதுக்கட்சியான தவெக-வின் செயல்பாடுகள் குறித்து நாங்கள் விமர்சனம் செய்ய முடியாது. தவெக நிர்வாகிகள் எடுக்கக் கூடிய முடிவுக்கு நாங்கள் கருத்து செல்வது சரியல்ல. எதிர்க்கட்சித் தலைவர் பணியைச் சரியாகச் செய்யும் எடப்பாடி பழனிசாமியை உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார்.

திமுகவுக்கு டெல்டா மாவட்ட மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், தமிழகம் முழுதும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியைப் பிடிக்கும். மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். திமுகவுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

செல்லூர் ராஜூ - விஜய்
செல்லூர் ராஜூ - விஜய்

அமைச்சர் மூர்த்தியை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். மதுரை மக்கள் பிரச்னைகளை சட்டமன்றத்தில் நான் பேசினால் அமைச்சர் மூர்த்தி சிரித்துக் கொண்டிருக்கிறார்.

திமுக தொண்டர்களைக் குஷிப்படுத்தவே அதிமுகவை விமர்சனம் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். அதிமுக யாருக்கும் அடிமையில்லை என எடப்பாடி பழனிசாமி தெளிவாகப் பேசினார். அதிமுகவை யாரும் அடிமைப்படுத்த முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அவ்வாறுதான் இருந்தார்கள். அவர்கள் வழியில் எடப்பாடி பழனிசாமியும் செயல்படுகிறார்.

அரசியல் அடையாளத்துக்காக டிடிவி தினகரன் பேசுகிறார். டிடிவி தினகரன் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. தவெக எனும் புதுக்கட்சியை திமுக வளர விடாது என்பதால் திமுகவுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும். கூட்டணி முடிவுகளை எடுக்கும் எடப்பாடி பழனிசாமியின் முடிவே அதிமுக-வின் நிலைப்பாடு.

விசிக தலைவர்களை திருமாவளவனால் ஒருமுகப்படுத்த முடியவில்லை, அவரே மாற்றி மாற்றி பேசுகிறார். முன்பிருந்த திருமாவளவனாக இப்போதில்லை. மதுரை மாநகராட்சியில் 69 உறுப்பினர்கள் வைத்துள்ள திமுகவால் புதிய மேயரை நியமிக்க முடியவில்லை.

மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்து செயல்படாமல் இருக்கிறது. திமுக மாமன்ற உறுப்பினர்கள் லெக்செஷன், கரப்சனாக உள்ளதால் புதிய மேயரை திமுகவால் தேர்வு செய்ய முடியவில்லை. புதிய மேயர், மண்டலத் தலைவர்கள், நியமனக்குழு தலைவர்களைத் தேர்வு செய்ய முடியாதது மதுரைக்கு வந்த சோதனை" என்றார்.

`மீண்டும் திமுகவுக்கே வாய்ப்பு; விஜய் செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியது!' - ஓபிஎஸ்

சிவகங்கை மாவட்டம் காளையர் கோவிலில் விடுதலைப் போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குரு பூஜையில் கலந்துகொண்ட முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுத் தலைவருமான ஓ பன்னீர் செல்வம் மருது பாண... மேலும் பார்க்க

`என்னை மன்னிச்சிருங்க; சூழல் சரியில்ல...' - கரூர் குடும்பத்தினரிடம் விஜய் உருக்கம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை மாமல்லபுரம் வரவழைத்து விஜய் ஆறுதல் கூறி வருகிறார். இந்தச் சந்திப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்ட... மேலும் பார்க்க

பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கு தடை! – புதுச்சேரி தொழிலாளர் துறை உத்தரவு

புதுச்சேரி தொழிலாளர் துறையின் செயலர் ஸ்மித்தா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 66, துணைப் பிரிவுகள் (1) (b) விதிமுறையின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களின்படி, பு... மேலும் பார்க்க

"மாநாடு முடியற வரைக்கும் அந்தக் கட்சியின் தொண்டனாவே மாறிடுவேன்" - 'பந்தல்' சிவா பேட்டி

இன்னும் சில மாதங்களே இருக்கின்றன 2026 சட்டசபைத் தேர்தலுக்கு. தேர்தல் வந்தால் மாநாடு, பொதுக்கூட்டம், பிரசாரம் என அரசியல் கட்சிகள் பிசியாகி விடுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் கட்சிகளுடன் சேர்ந்து இன்னொரு மு... மேலும் பார்க்க

'15 ஆண்டுகளாக உங்கள் பின்னால் அணிவகுத்தோம்; எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா' - பரபரக்கும் போஸ்டர்

கடந்த செப்டம்பர் மாதம் 27 - ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், அவர்களின் குடும்பத்தினரை இன்று சென்னை... மேலும் பார்க்க

மலேசியாவில் மார்கோ ரூபியோவை சந்தித்த ஜெய்சங்கர்; வர்த்தக பேச்சுவார்த்தைக்கு பாசிட்டிவ் சிக்னல்?

தற்போது மலேசியாவில் ஆசியான் உச்சி மாநாடு நடந்து வருகிறது.இதில் இந்தியா சார்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார்.இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப், பிரேசில் ... மேலும் பார்க்க