செய்திகள் :

தெலங்கானா முழுவதும் பந்த்; இட ஒதுக்கீடு கோரிக்கைக்காக ஒருங்கிணைந்த போராட்டம்; பின்னணி என்ன?

post image

தெலங்கானா மாநிலத்தில் அக்டோபர் 18ம் தேதியான (இன்று) மாநிலம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தெலங்கானா மாநில அரசு பிறபடுத்தப்பட்ட பிரிவினருக்கு (BC) 42% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை பிறப்பித்திருந்தது. இந்தப் புதிய ஒதுக்கீட்டால் BC, SC, ST உள்ளிட்ட அனைத்து பிரிவினர்களின் இட ஒதுக்கீடுகள் மொத்தம் 67% ஆகிறது. ஆனால், இந்திய அரசியல் சட்டத்தின் படி, இட ஒதுக்கீடுகள் 50%யை தாண்டக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

தெலங்கானா முழுவதும் பந்த்

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதல்; 3 கிரிக்கெட் வீரர்கள் பலி; என்ன நடந்தது?

இதன் அடிப்படையில் தெலங்கானா மாநில அரசு பிறப்பித்த பிற்படுத்தப்பட்டோருக்கான 42% இட ஒதுக்கீட்டிற்குத் தற்காலிக தடை விதித்திருக்கிறது தெலங்கானா உயர் நீதிமன்றம். உள்ளாட்சித் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அரசு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று தெலங்கானா மாநிலம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பந்த்திற்கு 'BC JAC' கூட்டமைப்பு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அம்மாநில துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்க்கா, பொது மக்களும் அனைத்து சமூகம் சார்ந்தவர்களும் பந்த்-இல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தெலங்கானா மாநில முழுவதும் பந்த்
தெலங்கானா முழுவதும் பந்த்

இந்த பந்த்தில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள், நாடகம், பேருந்து போக்குவரத்து உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கின்றன. RTC பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.

மருந்தகங்கள், மருத்துவனமனைகள் போன்ற அத்யாவசிய சேவைகள் மட்டும் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகை சமயத்தில் இதுபோன்ற பந்த் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம், இருப்பினும் இட ஒதுக்கீடுதான் முக்கியம் என மாநிலம் முழுவதும் பந்த் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெறும் தெலங்கானா அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த 42 சதவீத ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதல்; 3 கிரிக்கெட் வீரர்கள் பலி; என்ன நடந்தது?

போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில், கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்த... மேலும் பார்க்க

டாலர் பிரச்னையால் திணறும் மாலத்தீவு; சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்; என்ன செய்யப்போகிறது இந்தியா?

மாலத்தீவு என்றாலே உடனே நினைவுக்கு வருவது சுற்றுலாதான். இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு, சுற்றுலாவுக்குப் பெயர்போன தீவு. ஆனால் கொரோனாவுக்குப் பிறகு மாலத்தீவின் சுற்றுலா வருமானம் மெல்ல சரிவை நோக்கித் ... மேலும் பார்க்க

Diwali Leave: ``அக்., 21 ஆம் தேதி பொது விடுமுறை" - தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகை வரும் திங்கள் கிழமை (அக்டோபர் 20) வருவதை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்க்கும் பலரும் தங்களின் சொந்த ஊர் நோக்கி இன்றே படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்... மேலும் பார்க்க

"ஆணவப் படுகொலையை தடுக்க ஆணையம்; விரைவில் உரிய சட்டம்" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

நெல்லை கவின் ஆணவப்படுகொலை, திண்டுக்கல் ராமச்சந்திரன் என நாடுமுழுவதும் தினமும் ஆணவப்படுகொலைகள் சாதியின் பெயரால் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சாதியவாத சக்திகள் சாதிப் பெருமையைப் பரப்புவதால் ஏற்படும் வி... மேலும் பார்க்க

`கேள்வியே கேட்கக் கூடாதா?’ - வேல்முருகன் VS துரைமுருகன்; களேபரமான சட்டமன்றம்!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் 4வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. நீர்வளத்துறை தொடர்பான விவாதம் இன்று நடைபெறுகையில் சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஏ.எம்.முனிரத்தினம்சோளிங்கர் ஏரி மதகு அடைபட்டு ... மேலும் பார்க்க

"கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையம்; தமிழ் அதிகாரிகள் இடம்பெறக் கூடாதா?" - சீமான் கண்டனம்

கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிய உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அதிகாரிகள் இடம்பெறக் ... மேலும் பார்க்க