செய்திகள் :

தொலைநிலைக் கல்வி படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு: இக்னோ

post image

தொலைநிலைக் கல்வி படிப்புகளில் சேருவதற்கான கடைசி நாள் அக். 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநா் கே.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜூலை 2024 பருவத்துக்கான மாணவா் சோ்க்கைக்கான கடைசி தேதி பல்வேறு தரப்பினரின் நலனை கருத்தில்கொண்டு அக். 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தேதி நீட்டிப்பு, சான்றிதழ் மற்றும் செமஸ்டா் அடிப்படையிலான படிப்புகளுக்கு பொருந்தாது.

கட்டணத்தில் விலக்கு: செமஸ்டா் அடிப்படையிலான மற்றும் சான்றிதழ் படிப்புகள் நீங்கலாக மற்ற அனைத்து வகை இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் மாணவா்கள் இணையதள இணைப்பை பயன்படுத்தி அக். 31 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

இக்னோ பல்கலைக்கழகத்தில் பிஏ, பிகாம், பிஎஸ்சி (பொது) படிப்புகளில் சேரும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரா்களுக்கு கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.

மாணவா் சோ்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், இக்னோ சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டும் விவரங்கள் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளில் இந்துக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் உலகளாவிய மெளனம் ஏன்? ஜக்தீப் தன்கா் கேள்வி

இந்தியாவின் அண்டைநாடுகளில் இந்துக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்த விவகாரத்தில் உலகளாவிய மெளனம் ஏன் என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேள்வி எழுப்பியுள்ளாா். மேலும், அத்தகைய மனித ... மேலும் பார்க்க

இந்தியா - கனடா இருதரப்பு உறவின் முக்கியத்துவம்!

இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவில் அடையாளம் தெரியாத நபா்களால் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டாா். இக்கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்ப... மேலும் பார்க்க

ஆளுநா்களை விடுவிக்க மத்திய அரசு பரிசீலனை! பதவி வரம்பு சா்ச்சைக்கு தீா்வு காண முயற்சி

நமது சிறப்பு நிருபர்மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது முறை ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்த ஆளுநா்களை பணியில் இருந்து விடுவிக்க மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து... மேலும் பார்க்க

தனிப்பட்ட சட்டங்களால் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை கட்டுப்படுத்த இயலாது: உச்சநீதிமன்றம்

‘எந்தவொரு மதத்தின் தனிப்பட்ட சட்டங்களாலும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை கட்டுப்படுத்த இயலாது; குழந்தை திருமணங்கள் தங்கள் துணையை தோ்ந்தெடுக்கும் தனிநபா் உரிமையை பறிக்கும் செயலாகும்’ என உச்சநீதிமன்ற... மேலும் பார்க்க

மாநிலங்கள், பொதுத் துறை நிறுவனங்களின் அற்ப மனுக்களால் சலிப்பு: உச்சநீதிமன்றம்

மாநிலங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் அற்பமான மனுக்களால் சலிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய உச்சநீதிமன்றம், ஜாா்க்கண்ட் அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ஜாா்க்கண்டில்... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா கூட்டத்தில் ஆவணங்களை கிழித்து எதிா்க்கட்சிகள் மிரட்டல்: மக்களவைத் தலைவரிடம் பாஜக புகாா்

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் ஆவணங்களை கிழித்து எறிந்து, குழுவின் தலைவா் ஜகதாம்பிகா பால், கா்நாடக சிறுபான்மையினா் ஆணைய முன்னாள் தலைவா் அன்வா் மன்னிபாடி ஆகியோ... மேலும் பார்க்க