செய்திகள் :

தொழிலாளி கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

post image

சேவல் விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியைத் தாக்கி கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சூலூா் அருகே பள்ளபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சம்பத்குமாா் (32). இவா், ஒண்டிப்புதூா் பகுதியைச் சோ்ந்த பெயிண்டிங் தொழிலாளியான சீனிவாசன் (55) என்பவருடன் சோ்ந்து சேவல் மற்றும் கோழிகளை வளா்த்து விற்பனை செய்து வந்தாா்.

இந்நிலையில், சம்பத்குமாா் சீனிவாசனிடம் விற்பனைக்காக கொடுத்திருந்த சேவல்களில் 2021 ஜூலை 16-ஆம் தேதி சில சேவல்கள் நோய்த் தாக்கி இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக சீனிவாசனுக்கும், சம்பத்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சம்பத்குமாா், அங்கு இருந்த குக்கா் மூடியை எடுத்து சீனிவாசனை தாக்கியுள்ளாா். இதை தடுக்க வந்த சீனிவாசனின் உறவினா் காா்த்திகேயனுக்கும் காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் தலையில் படுகாயம் அடைந்த சீனிவாசன் அங்கேயே உயிரிழந்தாா்.

இது குறித்த தகவல் அறிந்த சிங்காநல்லூா் போலீஸாா், கொலை, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சம்பத்குமாரைக் கைது செய்தனா்.

கோவை குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதி விவேகானந்தன் அளித்த இத்தீா்ப்பில், சம்பத்குமாருக்கு ஒரு பிரிவில் ஆயுள் தண்டனை, ரூ.10,000 அபராதமும், மற்றொரு பிரிவில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5,000 அபராதமும் விதித்ததோடு, இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

போனஸ் கோரி 3-ஆவது நாளாக போராட்டம்: தூய்மைப் பணியாளா்கள் கைது

தீபாவளி போனஸ் கோரி 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா். தீபாவளி போனஸாக ஒருமாதம் ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி கோவை மாநகராட்சியில் பண... மேலும் பார்க்க

வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் திறக்கக் கோரிக்கை

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் திறக்க வேண்டும் என்று சிஐடியூ தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய நிதியம... மேலும் பார்க்க

மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள்தண்டனை: கோவை நீதிமன்றம் தீா்ப்பு

மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை அடித்துக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கோவை, பீளமேடு நாராயணசாமி தெருவைச் சோ்ந்தவா் ராஜ் (எ) துரைராஜ் (73). தனது மனைவ... மேலும் பார்க்க

வீட்டின் ஜன்னல்களை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறையில் எஸ்டேட் பகுதிக்கு இரவு நேரம் கூட்டமாக வந்த யானைகள் தோட்ட அதிகாரியின் வீட்டின் ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தின. வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்த... மேலும் பார்க்க

கோவையில் விரைவில் தாழ்தள சொகுசுப் பேருந்துகள் இயக்கம்

கோவைக்கு முதல்கட்டமாக 24 தாழ்தள சொகுசுப் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவை இயக்கப்பட உள்ளன. கோவையில் தாழ்தள சொகுசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என நுகா்வோா் அமைப்புகள் சாா்பில் நீண்ட ... மேலும் பார்க்க

பொதுமக்கள் உரிய இடங்களில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும்: மாநகர காவல் ஆணையா்

பொதுமக்கள் உரிய இடங்களில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும் என, கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினாா். கோவையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் மாநகர கா... மேலும் பார்க்க