செய்திகள் :

நியூசி.க்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்கு பதில் அர்ஷ்தீப் சிங் விளையாடுகிறாரா?

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குருப் பி பிரிவில் ஆஸ்திரேலிய அணியும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

இதையும் படிக்க: ஆஸி.யின் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம்; அரையிறுதியில் விளையாடுவாரா?

முகமது ஷமிக்கு ஓய்வா?

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள அதன் கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் விளையாடவுள்ளது. இந்தப் போட்டிக்கான பிளேயிங் லெவனில் மாற்றம் மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த போட்டியில் முகமது ஷமி மூன்று ஓவர்கள் வீசிய பிறகு அவருக்கு பந்துவீசுவதில் அசௌகரியம் ஏற்பட்டது. நேற்று நடைபெற்ற பயிற்சியிலும் 6-7 ஓவர்கள் மட்டுமே அவர் வீசியுள்ளார்.

இதையும் படிக்க: கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஜோஸ் பட்லர் அறிவிப்பு!

அர்ஷ்தீப் சிங்

அர்ஷ்தீப் சிங் நேற்று நடைபெற்ற பயிற்சியின்போது, பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னோ மோர்க்கல் முன்பாக 13 ஓவர்கள் பந்துவீசி தீவிர பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். நியூசிலாந்துக்கு எதிரான நாளையப் போட்டியில் முகமது ஷமிக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையில் 5 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், நாளை போட்டியில் அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா அபாரம்; இங்கிலாந்துக்கு ஹாட்ரிக் தோல்வி!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில்... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் சாதனை!

ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்று வரும் இன்றையப்... மேலும் பார்க்க

அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா; வெளியேறியது ஆப்கானிஸ்தான்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா முன்னேறியது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன. க... மேலும் பார்க்க

கேப்டனாக ஜோஸ் பட்லருக்கு கடைசி போட்டி; 179 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கராச்சியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து ம... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் விளையாடாதது மிகவும் கடினமாக இருக்கிறது: இந்திய அணியின் பயிற்சியாளர்

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரிஷப் பந்த் விளையாட முடியாதது மிகவும் கடிமனமாக இருப்பதாக அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இ... மேலும் பார்க்க

ஆஸி.யின் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம்; அரையிறுதியில் விளையாடுவாரா?

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது... மேலும் பார்க்க