செய்திகள் :

நியூசி. வேகப் பந்துவீச்சாளருக்கு காயம்; சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா?

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் லாக்கி ஃபெர்குசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது. தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டும் இலக்கல்ல, இந்தியாவை வீழ்த்துவதும்தான்: பாக். பிரதமர்

லாக்கி ஃபெர்குசனுக்கு காயம்

சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்னும் 11 நாள்களே உள்ள நிலையில், நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் லாக்கி ஃபெர்குசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் சர்வதேச டி20 லீக் தொடரில் விளையாடியபோது, ஃபெர்குசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தின் தன்மை குறித்து அறிந்துகொள்ள ஃபெர்குசனுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அறிமுகமான திடலிலே புதிய மைல்கல்லை எட்டிய நாதன் லயன்..!

இது தொடர்பாக நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியதாவது: லாக்கி ஃபெர்குசனுக்கு நேற்று ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவர்கள் கூறிய பிறகே, ஃபெர்குசனுக்கான காயம் எந்த அளவில் இருக்கிறது என்பது தெரிய வரும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஃபெர்குசனால் விளையாட முடியாத பட்சத்தில், அவருக்குப் பதிலாக அணியில் மாற்று வீரர் சேர்க்கப்படுவார் என்றார்.

முத்தரப்பு தொடர்: சதம் விளாசிய கிளன் பிலிப்ஸ்; பாகிஸ்தானுக்கு 331 ரன்கள் இலக்கு!

முத்தரப்புத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்துள்ளது.பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான ... மேலும் பார்க்க

2-வது போட்டியில் விளையாட விராட் கோலி தயார்; பிளேயிங் லெவனில் யாருக்கு இடமில்லை?

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விளையாட விராட் கோலி தயாராக இருப்பதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சீதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையி... மேலும் பார்க்க

2-வது ஒருநாள் போட்டிக்காக கட்டாக் வந்தடைந்த இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கட்டாக் வந்தடைந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்ட... மேலும் பார்க்க

3ஆம் நாள் முடிவு: 8 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை!

காலேவில் நடைபெறும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளில் இலங்கை 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 2ஆவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 257க்கு ஆல் அவுட்டானது இலங்கை. அடுத்து விளையாடிய ஆஸி. 414 ரன்களுக்... மேலும் பார்க்க

ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்த அலெக்ஸ் கேரி!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை அலெக்ஸ் கேரி முறியடித்துள்ளார்.ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்... மேலும் பார்க்க

7,222 ரன்களுடன் ஓய்வு பெற்ற இலங்கை வீரர்..! மரியாதை செய்த ஆஸி. அணி!

இலங்கை வீரர் திமுத் கருணரத்னே தனது கடைசி டெஸ்ட்டில் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 100 போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் தனது கடைசி இன்னிங்ஸில் ஆட்டமிழந்து செல்லும்போது ஆஸி. வீரர்கள் அன... மேலும் பார்க்க