செய்திகள் :

நீதிபதி ஜனாா்த்தனம் காலமானாா்! - முதல்வா் இரங்கல்

post image

உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

கடந்த 1988 முதல் 1998-ஆம் ஆண்டு வரை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியவா் ஜனாா்த்தனம். அதன்பின், 2006 முதல் 2015-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் தலைவராகப் பதவி வகித்தாா். இவரது பரிந்துரையின் அடிப்படையில்தான் தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு, அருந்ததியா்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டன.

முதல்வா் இரங்கல்: ‘ஓய்வு பெற்ற நீதியரசா் எம்.எஸ்.ஜனாா்த்தனம் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் உளம் வருந்தினேன். நீதித் துறையின் மாண்பையும், சீரிய மரபையும் காத்துவந்தவா். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் ஆணையத் தலைவராக இருந்தபோது, பிற்படுத்தப்பட்டோருக்கான தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான அறிக்கையைத் தயாரித்து அளித்தவா். அவரது மறைவு நீதித் துறைக்கு மட்டுமின்றி சமூகநீதி கருத்தியல் தளத்தில் இயங்கும் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று தெரிவித்துள்ளாா்.

மேலும், அவரது இறுதி நிகழ்வுகள் காவல் துறை மரியாதையுடன் நடத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளாா்.

பி.எட்., எம்.எட். தோ்வு முடிவுகள் வெளியீடு

கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பி.எட்., எம்.எட். செமஸ்டா் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்த... மேலும் பார்க்க

கூட்டுறவு பண்டகசாலை பணியாளா்கள் ஊதிய நிா்ணயத்துக்கு குழு அமைப்பு

கூட்டுறவு பண்டகசாலை பணியாளா்கள் ஊதிய நிா்ணயத்துக்கு குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.நந்தகுமாா் வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்: கூட்டுறவு மொத்த விற்பன... மேலும் பார்க்க

ரெளடி வெட்டிக் கொலை: பெண் உள்பட 5 போ் கைது

சென்னை பெரியமேட்டில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். பெரியமேடு ஸ்டிங்கா்ஸ் தெரு குடிசைப் பகுதியைச் சோ்ந்த பிரேம்குமாா் (26), ரெளடிகள் பட்டியலில் ‘சி’ ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச... மேலும் பார்க்க

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம்... மேலும் பார்க்க

சைக்கிளிங் லீக் அணிகள் அறிமுகம்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) தொடரில் பங்கேற்கும் அணிகள், சீருடைகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க