செய்திகள் :

பஞ்சாபில் தியானம்: 30 வாகனங்கள், 100 போலீசாருடன் வந்த கேஜரிவாலுக்கு கண்டனம்!

post image

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் வனப்பகுதியில் நடைபெறும் 10 நாள்கள் தியானத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்கிறார்.

இதற்காக ஹோஷியார்பூருக்கு செவ்வாய்க்கிழமை வருகைதந்த கேஜரிவாலுக்கு, 100 க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

10 நாள்கள் தியானம்

சமீபத்தில் நடந்துமுடிந்த தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சியிடம் ஆட்சியை இழந்தது.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தோல்வியடைந்தது கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

இதனிடையே, காலியாகவுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கேஜரிவால் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள தியான மையத்தில் நடைபெறும் 10 நாள் தியானத்தில் கலந்துகொள்வதற்காக அரவிந்த் கேஜரிவாலும் அவரது மனைவி சுனிதா கேஜரிவாலும் செவ்வாய்க்கிழமை இரவு பஞ்சாப் வந்தனர்.

ஹோஷியார்பூரில் இருந்து 14 கி.மீட்டரில் அமைந்துள்ள சோஹலில் என்ற வனப்பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு உயர் ரக வாகனத்தில் 100-க்கும் மேற்பட்ட பஞ்சாப் போலீசாரின் பாதுகாப்புடன் கேஜரிவால் வருகைதந்தார்.

இன்று மாலைமுதல் 10 நாள்களுக்கு கேஜரிவால் தியானம் செய்யவுள்ளார்.

இதையும் படிக்க : டிரம்ப் அறிமுகப்படுத்திய 13 வயது உளவுத்துறை அதிகாரி! சோகப் பின்னணி என்ன?

கேஜரிவாலுக்கு கண்டனம்

இந்த நிலையில், அதிகளவிலான போலீசார் பாதுகாப்புப் பணிக்காக பயன்படுத்தப்பட்டதற்கு மாநில அரசையும் கேஜரிவாலையும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

”அன்பைக் கொடுத்த பஞ்சாப் மக்களைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார். உலகம் முழுவதும் விஐபி கலாசாரத்தை விமர்சிக்கும் கேஜரிவால், இன்று டிரம்பைவிட பலத்த பாதுகாப்புடன் வலம்வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

தில்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் வெளியிட்ட பதிவில்,

“ஒரு காலத்தில் சாதாரண மனிதரைப் போல் வேடமிட்ட அரவிந்த் கேஜரிவால், இப்போது குண்டு துளைக்காத லேண்ட் க்ரூஸர்கள், 100 பஞ்சாப் போலீஸ் கமாண்டோக்கள், ஆம்புலன்ஸ்கள் கொண்ட ஆடம்பரமான வாகன அணியுடன் வலம்வருகிறர்.

தியானம் செய்வதற்காக மகாராஜா போன்று செல்கிறார். அவரது கார் அணிவகுப்பில் முதல்வர் பகவந்த் மானும் இல்லை. தியானத்துக்கு எதற்காக பஞ்சாப் மக்களின் வரிப் பணத்தில் பிரமாண்ட கார் அணிவகுப்புடன் செல்ல வேண்டும்?” எனக் கேட்டுள்ளார்.

கர்நாடகத்தில் 7 மாவட்டங்களில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் சோதனை!

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்தல், ஊழலில் ஈடுபடுவது குறித்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து கர்நாடக லோக்ஆயுக்தா ஏழு மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமாக இடங்களில் சோதனை நடத்தி வருகின்றத... மேலும் பார்க்க

தெலங்கானா விபத்து: மீட்புப் பணியில் கேரள 'கடாவர்' நாய்கள்!

காணாமல் போன மனிதர்கள், சடலங்களை கண்டறிவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற கேரளத்தைச் சேர்ந்த மோப்ப நாய்கள் தெலங்கானா சுரங்க விபத்து பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளன. தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட... மேலும் பார்க்க

மூன்று அல்ல பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்: சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச பல்கலைக்கழகங்களில் மூன்று அல்ல, பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கல்விக் கொள்கைக்... மேலும் பார்க்க

பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.மேலும், இந்திய தேசியக் கொடியை அமைச்சர் முன்னிலையில் கிழித்ததால... மேலும் பார்க்க

இந்திய தொழில்நுட்ப மறுமலா்ச்சி வளா்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம் -அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

அஸ்வினி வைஷ்ணவ்- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, ரயில்வே, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா்மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில், சிறு விவசாயி ஒருவா் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூ... மேலும் பார்க்க

டிஜிட்டல் முறைகள் மூலம் நிா்வாகிகள் திறன் மேம்பாடு: தோ்தல் ஆணையம்

தோ்தல் துறை நிா்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. புது தில்லியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை தோ்தல் அதிகாரிகளின் ... மேலும் பார்க்க