செய்திகள் :

``படம் எடுத்த பிறகுதான் கல்யாணம் பண்ணிக்கணும்'னு நினைச்சேன்'' - திருமணம் குறித்து அபிஷன் ஜீவிந்த்

post image

`டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்திருந்தார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். கடந்த மே மாதம் வெளியான அப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.

அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரின் உதவி இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

`டூரிஸ்ட் பேமிலி' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் தனது தோழியிடம் இவர் "வருகிற அக்டோபர் மாதம் திருமணம் செய்துக் கொள்கிறாயா?" எனக் கேட்டிருந்தார்.

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

அந்தக் காணொளியும் இணையத்தில் வைரலாகி இருந்தது. அபிஷன் சொன்னதுபோலவே, நேற்று அவர் (அக்டோபர் 31) காதலி அகிலாவை கரம்பிடித்தார்.

இவர்களது திருமணம் இருவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ, சென்னையில் கோலகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து அபிஷன் ஜீவிந்த்- அகிலா இருவரும் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

"நேற்று எனக்கு மிகவும் முக்கியமான நாள். எங்கிருந்தோ வந்த ஒரு பையனை வளர்த்துவிட்டது நீங்கள் எல்லோரும் தான்.

உங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. என்னிடம் அன்பாக நடந்துகொண்டிருக்கிறீர்கள்.

நான் எதை செய்தாலும் நீங்கள் (மீடியா) மக்களிடம் கொண்டி சேர்த்திருக்கிறீர்கள்.

அபிஷன் ஜீவிந்த்- அகிலா
அபிஷன் ஜீவிந்த்- அகிலா

எல்லோருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். படம் எடுத்தப்பிறகுதான் நான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

எப்போது அகிலாவை நன்றாகப் பார்த்துக்கொள்ள முடியும் என்று தோணுகிறதோ? அப்போது தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

அந்த இடத்தில் என் வாழ்க்கை மாறும் என்று நம்பியதால் தான் மேடையில் வைத்து என்னை "வருகிற அக்டோபர் மாதம் திருமணம் செய்துக் கொள்கிறாயா?" என்று கேட்டேன்.

6-ம் வகுப்பு படிக்கும்போது இருந்தே அவர்களை எனக்கு தெரியும். நாங்கள் இருவரும் பள்ளி நண்பர்கள் தான். படம் எடுப்பதை விட மாட்டேன். இடையில் படம் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எனக்கு ஏற்ற படங்களாக இருந்தால் நடிப்பேன்.

அபிஷன் ஜீவிந்த்- அகிலா
அபிஷன் ஜீவிந்த்- அகிலா

நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அதிலிருந்து சில நல்ல கதைகளைக் கேட்டு வைத்திருக்கிறேன். ஆனால் அடுத்து ஒரு படம் இயக்கவிருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

``என் முதுகில் குத்திக் குத்தி காயம், ரத்தம்'' - மேடையில் கலங்கி அழுத நடிகர் ஆனந்த் ராஜ்

அறிமுக இயக்குநர் ஏ. எஸ். முகுந்தன் இயக்கத்தில், நடிகர் ஆனந்தராஜ், பிக் பாஸ் சம்யுக்தா, ஆராத்யா, முனீஷ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் “மெட்ராஸ் மாஃபியா கம்... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: தேவதாஸாக நடிகர் லோகேஷ் கனகராஜ்; ஹீரோயினாக வமிகா கேபி - எப்போது ரிலீஸ்?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அவதாரமெடுத்துள்ளார்.லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்திருந்தது.அப்படத்தின் ப்ரோமோஷன் நேர்காணல்களிலேயே, அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்த... மேலும் பார்க்க

மாரி செல்வராஜ்: ``தமிழிலும் அர்ப்பணிப்புள்ள நடிகர்கள் இருக்கிறோம்'' - நடிகை ஆராத்யா விமர்சனம்

அறிமுக இயக்குநர் ஏ. எஸ். முகுந்தன் இயக்கத்தில், நடிகர் ஆனந்தராஜ், பிக் பாஸ் சம்யுக்தா, ஆராத்யா, முனீஷ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் “மெட்ராஸ் மாஃபியா கம்... மேலும் பார்க்க

Ajith: "F1 படத்தில் Brad Pittடிடம் கேட்கும் கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்" - அஜித்தின் பதில் என்ன?

நடிகர் அஜித் குமார், இப்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். 'அஜித் குமார் ரேஸிங்' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அதைப் பல்வேறு உலக நாடுகளின் கார் பந்தயப் போட்டிகளிலும் பங்கெடுக்கச்... மேலும் பார்க்க

Ajith Kumar: "20 வருடங்களுக்கு முன் என்னைச் சந்தித்திருந்தால், என்னை வெறுத்திருப்பீர்கள்" - அஜித்

நடிகர் அஜித் குமார் சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா யூடியூப் சேனலுக்குக் கொடுத்த நேர்காணலில் அவர் உதவியாளர்கள் இல்லாமல் எளிமையாக தனது வேலைகளைத் தானே செய்துகொள்வது ஏன் என்பதை விளக்கி பேசியுள்ளா... மேலும் பார்க்க

Karur Stampede: ``கூட்டநெரிசலுக்கு அந்த தனிநபர் மட்டும் பொறுப்பு கிடையாது!'' - அஜித் பேட்டி

அஜித் இப்போது ரேஸிங் பக்கம் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். ' குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு அவர் நடிக்கவிருக்கும் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த இடைவெளிய... மேலும் பார்க்க