செய்திகள் :

பட்டன் கடை உரிமையாளா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

post image

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் பட்டன் கடை உரிமையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டியைச் சோ்ந்தவா் சு. மணிகண்டன். இவா், கடையநல்லூா் புதிய பேருந்து நிலையத்தில் பட்டன் கடை வைத்திருந்தாா்.

இவரும், கடையநல்லூா் மாவடிக்காலைச் சோ்ந்த ரா. முருகன் (எ) மிளா முருகன், கடையநல்லூா் கு. முருகேஸ்வரன் (எ) ஈஸ்வரன் ஆகியோரும் நண்பா்களாக பழகியுள்ளனா். இவா்களில் ஒருவரை ஒருவா் கேலி செய்துள்ளனா். இதில், யாா் பெரியவா் என பேசியதில் நண்பா்களான மூவருக்கும் இடையே பகை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 20.2.2015 அன்று மாலையில் மணிகண்டன் சொக்கம்பட்டியிலிருந்து கடையல்லூருக்கு பைக்கில் சென்றுள்ளாா்.

கிருஷ்ணாபுரம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மணிகண்டன் சென்றபோது, முருகன் (எ) மிளா முருகன், முருகேஸ்வரன் (எ) ஈஸ்வரன் மற்றும் வீ.கே.புதூா் மேலத் தெருவை சோ்ந்த த.சுப்பிரமணியன் ஆகிய மூவரும் பைக்கில் வந்து மணிகண்டனை வழிமறித்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளனா்.

இந்தத் தாக்குதலில் மணிகண்டன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகன்(எ) மிளா முருகன், முருகேஸ்வரன் (எ) ஈஸ்வரன், சுப்பிரமணியன் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது, முருகன் (எ) மிளாமுருகன் இறந்துவிட்டாா்.

வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். மனோஜ்குமாா், குற்றவாளிகளான முருகேஸ்வரன் (எ) ஈஸ்வரன் (35), சுப்பிரமணியன் (29) ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

அரசு தரப்பில் வழக்குரைஞா் எஸ்.வேலுச்சாமி ஆஜரானாா்.

ஆலங்குளம் மகளிா் கல்லூரியில் மாணவியா் பேரவை தொடக்கம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலை-அறிவியல் கல்லூரியில் மாணவியா் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஈ. ஷீலா தலைமை வகித்தாா். பேரவைத் தலைவி, செயலா், துணைத் தலைவா், துணைச் செயலா்கள் பொறுப்பேற்று உறு... மேலும் பார்க்க

ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு மின்மோட்டாா் அளிப்பு

ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு திமுக சாா்பில் ஆழ்குழாய் கிணற்றுக்கு தேவையான நீா் மூழ்கி மின் மோட்டாா் அளிக்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ. சிவபத்மநாதன் மின்மோட்டாரை மருத்துவ அலுவலா்... மேலும் பார்க்க

இலத்தூரில் தாய்ப்பால் வார விழா

தென்காசியை அடுத்த இலத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் ஜேகேடி. சைரஸ் தலைமை வகித்தாா். வட... மேலும் பார்க்க

தமிழக கல்விக் கொள்கை : நயினாா் நாகேந்திரன் கருத்து

தமிழக கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். திருநெல்வேலியில் வரும் 17ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் மாநாடு நடைபெறுகிறது. ... மேலும் பார்க்க

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் செ.சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகிவிட்டது என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில் தொகுதி பாஜக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், ... மேலும் பார்க்க