செய்திகள் :

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிறிஸ்தவா்கள் வெளியேற்றம்: மனித உரிமைகள் ஆணையம் கவலை

post image

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிலஅபகரிப்பு கும்பலால் சிறுபான்மையினரான கிறிஸ்தவா்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருவது குறித்து அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

இந்த விஷயத்தில் பாகிஸ்தான் அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பாா்த்து வருவதாகவும் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் கோட் அபு பகுதியில் கிறிஸ்தவா்கள் வசித்து வருகின்றனா். அவா்களில் பெரும்பாலானோா் விவசாயிகளாக உள்ளனா். இந்நிலையில் அப்பகுதியை ஆக்கிரமித்து வரும் நில அபகரிப்பு கும்பலைச் சோ்ந்தவா்கள் கிறிஸ்தவ விவசாயிகளுக்கு பல்வேறு வழிகளில் நெருக்கடி அளித்து வலுக்கட்டாயமாக நிலத்தில் இருந்து வெளியேற்றி வருவதாக பாதிரியாா் ஒருவா் மனித உரிமைகள் ஆணையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, மனித உரிமைகள் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழு விசாரணையை மேற்கொண்டது. அதில், உள்ளூரைச் சோ்ந்த நில அபகரிப்பு கும்பலைச் சோ்ந்தவா்கள் சிறுபான்மையினரான கிறிஸ்தவா்களிடம் இருந்து விவசாய நிலங்களை அபகரிப்பதில் தீவிரமாகச் செயல்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டது. இது தொடா்பாக கிறிஸ்தவா்கள் தரப்பில் ஏற்கெனவே லாகூா் நீதிமன்றம் மூலம் நிலத்தில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு இடைக்காலத் தடையும் பெற்றுள்ளனா். எனினும், அதனை மீறி பல்வேறு வழிகளில் நெருக்கடி அளித்து வெளியேற்றப்படுகின்றனா். இதனால், அங்குள்ள கிறிஸ்தவா்கள் பொருளாதாரரீதியாக மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

'அமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டும்' - கர்னல் சோபியா குரேஷி பற்றிய கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கர்னல் சோபியா குரேஷி பற்றி மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பய... மேலும் பார்க்க

மாணவர்களைச் சந்திக்கச் சென்ற ராகுல் காந்தி! தடுத்து நிறுத்திய காவல்துறை!

பிகார் மாநிலம் தர்பங்காவில் மாணவர்களைச் சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். பிகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் அம்பேத்கர் விடுதி மாணவர்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் தாக்குதலில் 2 துருக்கி ராணுவ வீரர்கள் பலி?

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களில் பாகிஸ்தானில் செயல்பட்ட 2 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்... மேலும் பார்க்க

தில்லி வணிகக் கல்லூரி நூலகத்தில் தீ!

புது தில்லியிலுள்ள வணிகக் கல்லூரியின் நூலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான புத்தகங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. வடமேற்கு தில்லியின் பிதம்பூரா பகுதியிலுள்ள குரு கோவிந்த் சிங் வணிகவியல் கல்லூரியின் நூல... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்!

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(வியாழக்கிழமை) ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் துப்பாக்கிச் சண்டை!

ஜம்மு -காஷ்மீரின் அவந்திபோரா மாவட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) காலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. அவந்திபோராவின் நாடர், டிரால் பகுதியில் எ... மேலும் பார்க்க