செய்திகள் :

"பாதி விலைக்கு ஸ்கூட்டர்; 48,384 பேரிடம் ரூ.231 கோடி மோசடி" - சட்டசபையில் கேரள முதல்வர்

post image

கேரள மாநிலம் இடுக்கி தொடுபுழாவைச் சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன் (27). இவர் ‘ஸீட் சொசைட்டி’ என்ற பெயரில் பாதி விலைக்கு ஸ்கூட்டர், லேப்டாப், வீட்டு உபயோக பொருட்கள், விவசாய உபகரணங்கள் வழங்குவதாகக்கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்துள்ளார்.

இந்த நிலையில், ‘பணம் வாங்கிவிட்டு ஸ்கூட்டர் வழங்கவில்லை’ என மூவாற்றுப்புழாவைச் சேர்ந்த சிலர் போலீஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அனந்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இவரது பின்னணியில் சாயி கிராமம் டிரஸ்டின் நிர்வாகியான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கே.என்.அனந்த குமார் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கே.என்.அனந்தகுமார் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய ஆப்பரேஷன் செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இந்த நிலையில் பாதிவிலைக்கு ஸ்கூட்டர் வழங்குவதாக மோசடி நடந்தது குறித்து கேரள சட்டசபையில் எதிர்கட்சியான காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், "பாதிவிலைக்கு பொருள்கள் வழங்குவதாக நடந்த மோசடி சம்பந்தமாக 1343 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதில் 665 வழக்குகல் கிரைம் பிராஞ்ச்-க்கு மாற்றப்பட்டுள்ளன. 231 கோடி ரூபாய் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்படுள்ளது. மோசடியில் 48,384 பேர் பணத்தை இழந்துள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்படுள்ளன. என்.ஜி.ஓ கான்பரேசன் மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

மாதிரி படம்
ஸ்கூட்டர்

இதுபற்றி தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் கூடுதல் விபரங்கள் வெளியே வரும். முதலில் பணம் கொடுத்தவர்களுக்கு பாதி விலைக்கு ஸ்கூட்டர் உள்ளிட்டவை கொடுத்துள்ளனர். அடுத்தகட்டமாக பணம் கொடுத்தவர்களை ஏமாற்றி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அரசு உள்ளது. சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் முடிந்த பின்னரே பணம் திருப்பி வழங்குவது குறித்த விஷயங்கள் பற்றி கூறமுடியும்" என்றார்.

நெல்லை: `என்னை எப்படியும் கொன்னுடுவாங்க'- கொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற எஸ்.ஐ-யின் கண்ணீர் வீடியோ

நெல்லை டவுன், தைக்கா தெருவில் வசித்து வந்தவர் ஜாகிர் உசேன் என்கிற பிஜிலி (60). விருப்ப ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர், டவுன் ஜாமியா தைக்கா தெருவில் உள்ள பள்ளி வாசலுக்கு தொழுகைக்காக பைக்கில்... மேலும் பார்க்க

கோவை: திருமணம் கடந்த உறவில் பிறந்த ஒரு மாத குழந்தை சந்தேக மரணம் - உடலை தோண்டி பிரேத பரிசோதனை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை. இவர்களுக்கு இடையே உள்ள திருமணம் தாண்... மேலும் பார்க்க

சிவகாசி: ஜாமீனில் வந்தவர் வீட்டிற்குள் புகுந்து வெட்டி கொலை; பழிக்குப்பழி சம்பவத்தில் 3 பேர் கைது

சிவகாசி அருகே பழிக்குப்பழியாக வீடு புகுந்து கூலித் தொழிலாளியை மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போத... மேலும் பார்க்க

கச்சத்தீவு திருவிழாவுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்கள்... படகுடன் சிறைபிடிப்பு..!

கடந்த 14,15 ஆகிய இரு நாள்களில் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடந்தது. இதில் 3140 இந்திய பக்தர்கள் பங்கேற்றனர். கச்சத்தீவு திருவிழாவினை முன்னிட்டு ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடி... மேலும் பார்க்க

பெங்களூரு: காதலனைக் கொன்று தண்டவாளத்தில் போட்ட பெண்; பஸ் டிக்கெட்டால் சிக்கியது எப்படி?

பெங்களூரு அருகே கடந்த மாதம் 19ம் தேதி ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். அவரது உடல் இரண்டு துண்டுகளாகக் கிடந்தது. அவர் ரயில் விபத்தில் இறந்திருக்கலாம் என்று கருதி போலீஸார்... மேலும் பார்க்க

Digital Arrest: 7 நாள் டிஜிட்டல் கைதை விரும்பி ஏற்ற மும்பை பெண்; பறிபோன ரூ.37 லட்சம்; என்ன நடந்தது?

நாடு முழுவதும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதுவும் சி.பி.ஐ அல்லது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்று கூறி, பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்தை அபகரிக்கும் செயல்கள் அதிக... மேலும் பார்க்க