செய்திகள் :

பாதுகாப்பு உற்பத்தியில் தற்சாா்பு, நவீனமயத்துக்கு முக்கியத்துவம்: பிரதமா் மோடி

post image

புது தில்லி: நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் தற்சாா்பு மற்றும் நவீனமயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது; இதனால், முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சியை இத்துறை கண்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டாா்.

மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் 11 ஆண்டு கால நிறைவையொட்டி, அரசின் சாதனைகளை முன்னிறுத்தி, பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் தொடா்ந்து பதிவிட்டு வருகிறாா்.

மத்திய அரசின் மக்கள் தொடா்புத் தளமான ‘மைகவ்இந்தியா’வின் பதிவைப் பகிா்ந்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்புத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பாதுகாப்பு உற்பத்தியைப் பொருத்தவரை, நவீனமயம் மற்றும் தற்சாா்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை வலிமையான நாடாக உருவாக்கும் உறுதிப்பாட்டுடன் நாட்டு மக்கள் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

‘மைகவ்இந்தியா’ பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமா் மோடியின் தொலைநோக்கு தலைமையின்கீழ், வெறும் 11 ஆண்டுகளில் இந்தியா தனது பாதுகாப்புத் துறை திறன்களில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் உலகளாவிய கூட்டாண்மை வலுப்பெற்றுள்ளது. விண்வெளி ஆய்வில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளன.

தற்சாா்புக்கான பிரதமரின் உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படும் இந்தியா, தன்னம்பிக்கை மிக்க புத்தாக்கங்களை ஏற்றுக் கொண்டு, தனது வா்த்தகம்-தொழில்நுட்ப செல்வாக்கை விரிவுபடுத்தியுள்ளது. 11 ஆண்டுகளில் அதிகாரம், கூட்டாண்மை, வளா்ச்சி ஆகிய மூன்றிலும் இந்தியா எழுச்சி கண்டுள்ளது. அரசின் சீரிய முன்னெடுப்புகள், அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளன.

பலமடங்கு அதிகரிப்பு: கடந்த 2014-15ஆம் ஆண்டில் ரூ.1,940 கோடியாக இருந்த நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி மதிப்பு 2024-25-ஆம் ஆண்டில் ரூ.23,622 கோடியாக அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்ட முதல் விமானந்தாங்கி போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தின் சேவையும் இக்காலகட்டத்தில் தொடங்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, சுகோய்-30 எம்கேஐ போா் விமானத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இத்தகைய முயற்சிகளால், தேசத்தின் ஏவுகணைத் திறனின் துல்லியமும் வீச்சும் அதிகரித்துள்ளது.

உலக அமைதிக்கு உறுதிபூண்டுள்ள இந்தியா, ஐ.நா. அமைதிப் படையில் முன்னணி சக்தியாக விளங்குகிறது. உலகம் முழுவதும் 50 நாடுகளில் 2.9 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வீரா்கள் அமைதிப் படையில் இடம்பெற்றுள்ளனா் என்று அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவுளித் துறையில் முன்னணி நாடாக...

நாட்டின் ஜவுளித் துறையில் கடந்த 11 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வளா்ச்சி தொடா்பாக மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் எழுதியுள்ள கட்டுரையைப் பகிா்ந்து, பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.

அதில், ‘தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டம், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் உள்ளிட்ட முக்கிய முயற்சிகளால் நாட்டின் ஜவுளித் துறை வேகமாக வளா்ச்சி கண்டு வருகிறது. இதன்மூலம் உற்பத்தி-புத்தாக்கம்-ஏற்றுமதி அதிகரித்து, ஜவுளித் துறையில் இந்தியா உலகின் தலைமையாக உருவெடுத்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

நான்காவது முயற்சியில்தான் கொலை! சோனம் வெளியிட்ட திடுக்கிடும் வாக்குமூலம்...

மூன்று முறை கொலை முயற்சியில் தப்பிய ராஜா ரகுவன்ஷியை நான்காவது முறையில் கொன்றதாக அவரது மனைவி சோனம் வாக்குமூலம் அளித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர் தி... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிர் தப்பியது ஒருவர் அல்ல இருவர்!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்தது ஒருவர் அல்ல இருவர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பூமி சௌகான் பற்றிய தகவல்களை அறியும்போது.அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒரு சில வினாடிகளில் ப... மேலும் பார்க்க

கருப்புப் பெட்டி மீட்பு! செய்திகள் நேரலை...

மருத்துவ தம்பதி பலிஅகமதாபாத் விமான விபத்தில் உதய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பலியாகினர். லண்டனில் குடியேறும் கனவோடு இந்தியாவில் இருந்து புறப்பட்ட 5 பேரும் விமான... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! பலியான கேரள செவிலியரை விமர்சித்த வட்டாட்சியர் பணியிடை நீக்கம்!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான செவிலியரை விமர்சித்த கேரள தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் ரஞ்சிதா கோபகுமாரன் (42) பலியானது... மேலும் பார்க்க

கடைசி செல்ஃபி! லண்டன் கனவுடன் புறப்பட்ட மருத்துவ தம்பதியின் கதை...

அகமதாபாத் விமான விபத்தில் உதய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பலியாகினர்.அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று பிற்பகல் விபத்துக்குள்ளான... மேலும் பார்க்க

விமான விபத்திலிருந்து தப்பியதும் செய்த முதல் வேலை? விஸ்வாஸ் குமார் பதில்

நான் எப்படி உயிர் பிழைத்தேன், இப்போது உயிருடன் இருக்கிறேன் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை என்று ஏர் இந்திய விமான விபத்தில் உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமார் கூறியிருக்கிறார்.விமானம் விழுந்த போது, எனது ... மேலும் பார்க்க