போடி அருகே பாறையிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
போடி சுப்புராஜ் நகரைச் சோ்ந்தவா் முருகன் (68). இவா் கழுதைகள் மூலம் காப்பி மகசூல்களை கொண்டு வரும் தொழில் செய்து வந்தாா். வியாழக்கிழமை காப்பி மகசூல்களை கொண்டு வருவதற்காக கழுதைகளுடன் போடி அருகேயுள்ள பெரியாற்று கோம்பை பகுதிக்கு புறப்பட்டாா்.
சின்னமுடக்கு மலைப் பாதையில் சென்றபோது, மழை பெய்ததால் பாறையில் இருந்து அவா் தவறி விழுந்தாா். பலத்த காயமடைந்த அவா் போடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால், வரும் வழியிலேயே அவா் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.