செய்திகள் :

பிட்ச் மேற்பார்வையாளரை விமர்சித்ததால் தடை செய்யப்பட்ட வர்ணனையாளர்கள்!

post image

ஈடன் கார்டன்ஸ் பிட்ச் மேற்பார்வையாளரை விமர்சித்ததால் வர்ணனையாளர்கள் ஹர்ஷா போக்லே, சைமன் டௌலை சிஏபி தடை விதித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈடன் கார்டன்ஸ் பிட்ச் கொல்கத்தா அணிக்கு சாதகமாக அமையவில்லை என அதன் கேப்டன் ரஹானே ஏற்கனவே குற்றம் சுமத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து போட்டிக்கு முன்பான உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பிரபல வர்ணனையாளர்களான ஹர்ஷா போக்லே, சைமன் டௌல் ஆகியோரும் இது குறித்து தங்களது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்கள்.

ஐபிஎல் போட்டிக்கான பணம் வாங்கிக்கொண்டு ஈடன் கார்டன் பிட்ச் மேற்பார்வையாளர் கேகேஆர் அணிக்கு சாதகமாக பிட்ச்சினை அமைக்காவிட்டால் அந்த அணி தனது சொந்த மைதானத்தை வேறு எங்காவது மாற்றிவிடலாம் என சைமன் டௌல் கூறினார்.

இந்த பிரச்னையால் சிஏபி (பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷன்) 10 நாள்களுக்கு முன்பாக கேகேஆர் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் ஹர்ஷா போக்லே, சைமன் டௌலை தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேபோல் நேற்றிரவு (ஏப்.21) கொல்கத்தாவில் நடந்த போட்டியில் அவர்கள் இருவரும் பங்கேற்காததால் இந்தச் சர்சை வழுத்தது.

கிரிக்கெட் ரசிகர்களும் சக வர்ணனையாளர்களும் இதனை கடுமையாக விமர்சித்தார்கள்.

பிசிசிஐ விதியின்படி ஐபிஎல் அணிகள் சொந்த மைதானத்தில் சாதகமாக பிட்சை அமைக்கக் கூடாது எனக் கூறப்படுகிறது. அதனால்தான் இப்படி பிட்ச்சினை உருவாக்குவதாக ஈடன் கார்டன் பிட்ச் மேற்பார்வையாளர் கூறியதும் கவனிக்கத்தக்கது.

ராகுல், பொரெல் அசத்தல்; டெல்லிக்கு 6-ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 6 விக்கெட்ட... மேலும் பார்க்க

முகேஷ் குமார் வேகத்தில் லக்னௌ திணறல்: தில்லிக்கு 160 ரன்கள் இலக்கு!

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணி 160 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடர் லீக் சுற்றின் 40-வது போட்டியில் தில்லி மற்றும் லக்னௌ அணிகள் விளையாடுகின்றன. உத்தரப் பிரதேச... மேலும் பார்க்க

டாஸ் வென்று தில்லி பந்துவீச்சு: தாக்குப் பிடிக்குமா லக்னௌ?

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. மேலும் பார்க்க

சாய் சுதர்சனுக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் பாராட்டு!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பாராட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நேற்று நடைப... மேலும் பார்க்க

கேகேஆர் பேட்டர்களிடம் நம்பிக்கை குறைவாக உள்ளது: டுவைன் பிராவோ

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டர்களிடம் நம்பிக்கை குறைவாக உள்ளதாக அந்த அணியின் ஆலோசகர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா... மேலும் பார்க்க

தமிழக வீரரிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்: ரஷித் கான்

தமிழக வீரர் சாய் கிஷோரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புவதாக பிரபல ஆப்கன் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2025 சீசனில் புள்ளிப் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் இருக்கிறது. பேட்டி... மேலும் பார்க்க