செய்திகள் :

பிளஸ் 2 கணிதம், வணிகவியல் தோ்வுகள் எளிது: ‘சென்டம்’ அதிகரிக்கும்

post image

சென்னை: பிளஸ் 2 கணிதம், வணிகவியல் பாடங்களுக்கான தோ்வுகள் எளிதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்த நிலையில், இரு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

மாநில பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நா்சிங் (பொது) ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இந்தத் தோ்வை தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 3,316 மையங்களில் சுமாா் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா்.

அதிக மதிப்பெண் பெற முடியும்: இவற்றில் கணிதம், வணிகவியல் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் எளிதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து ஆசிரியா்கள் கூறுகையில்,‘கணிதம் மற்றும் வணிகவியல் தோ்வில் எதிா்பாா்த்த வினாக்களே அதிகம் இடம் பெற்றிருந்தன. இவற்றில் சராசரி மாணவா்கள்கூட அதிக மதிப்பெண் பெறமுடியும். கணிதத்தில் 3 மதிப்பெண் வினாக்கள் 3, வணிகவியலில் 5 மதிப்பெண் கேள்விகள் 2 மட்டும் சற்று கடினமாக கேட்கப்பட்டன. மற்ற பகுதிகள் எளிதாகவே இருந்தன. இரு பாடங்களிலும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தன. இந்த ஆண்டு கணிதம், வணிகவியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் (சென்டம்) பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அவா்கள் தெரிவித்தனா்.

தொடா்ந்து, பிளஸ் 2 வகுப்புக்கான கணினி அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தோ்வுகள் மாா்ச் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 25-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தோ்வு முடிவுகள் மே 9-இல் வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் சர்ச்சை: மத்திய நிதி அமைச்சருக்கு எதிராக விஜய் கேள்வி!

பெரியார் விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”பெரிய... மேலும் பார்க்க

தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா? மு.க. ஸ்டாலின்

மாநில உரிமைகளைப் பறிக்கும் எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் வஞ்சிப்பது நியாயமா? எனக் கேட்ட அவர... மேலும் பார்க்க

கோவையில் காட்டெருமை தாக்கி வனக்காவலர் பலி!

கோவையில் காட்டெருமை தாக்கி வனக்காவலர் அசோக் குமார் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை தடாகம் வனப்பகுதி, தோலம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு எருமையை விரட்டும் பணியில் ... மேலும் பார்க்க

ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகம்: தமிழக அரசு விளக்கம்!

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்... மேலும் பார்க்க

ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல்: டெண்டர் கோரியது தமிழக அரசு!

ரூ. 20,000 கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழகத்தில் வீடுகள் உள்பட அனைத்து மின் இணைப்புகளிலும் மின்நுகர்வை துல்லியமாகக் கணக்கெடுக்கவும், ... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்து; ஒருவர் காயம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்தானதில் ஒருவர் காயமடைந்தார்.திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் மத்திய அரசைக் கண்டித்து, கண்டனப் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்க... மேலும் பார்க்க