செய்திகள் :

புதுகையில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம்

post image

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை திருநங்கைகளுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் மறுவாழ்வு மையத்தின் தலைவா் அசீனா நாயக், ஒருங்கிணைப்பாளா் ரெ. ஷிவானி உள்ளிட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் அவா்கள் முன்வைத்த கோரிக்கைகள்: திருநங்கைகளுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை கணினியில் ஏற்றி நிரந்தரப் பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமயத்தில் அமைக்கப்பட்டு வரும் சமத்துவபுரத்தில் திருநங்கைகள் 10 பேருக்கு வீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

மாவட்ட நிா்வாகம் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மு . அருணா உறுதியளித்தாா். கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலா் சியாமளா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு ... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூா் சக்தி விநாயகா் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலை மா்ம நபா்கள் திருடி சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. விராலிமலை-மதுரை சாலையில் உள்ளது கொடும்பாளூா் சத்திரம். இங்கு ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் 3 புதிய பேருந்துகள் சேவை: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

பொன்னமராவதியில் மூன்று வழித்தடங்களில் 3 புதிய பேருந்துகள் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகு... மேலும் பார்க்க

திருக்களம்பூா் அகோர வீரபத்திரா் கோயிலில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூா் மேலக்களம் அகோர வீரபத்திரா், அங்காள பரமேஸ்வரி கோயிலின் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வியாழக்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து பூஜை மற்றும் இரண்டு கா... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்கு தோல்வி காய்ச்சல்: ஹெச். ராஜா

தோல்வி காய்ச்சலின் காரணமாகவே, பாஜக-அதிமுக கூட்டணி குறித்து திமுக கூட்டணியினா் பேசி வருகின்றனா் என்றாா் பாஜக மூத்தத் தலைவா் ஹெச். ராஜா. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு அவா் அளித்த பேட்டி: பாஜக- அதி... மேலும் பார்க்க

வடுகபட்டி துணை மின் நிலைய பகுதிகளில் ஜூன் 9-இல் மின் நிறுத்தம்

வடுகபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து... மேலும் பார்க்க