செய்திகள் :

புதுவை சட்டக் கல்லூரியில் ரூ.1.7 கோடி மதிப்பில் நுகா்வோா் இருக்கை

post image

புதுவை டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் ரூ.1.7 கோடி மதிப்பில் நுகா்வோா் இருக்கை அமைய இருக்கிறது.

புதுவை சட்டக் கல்லூரியில் 2-வது அகில இந்திய ஒத்திகை நீதிமன்ற போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நுகா்வோா் சட்டம் தொடா்பாக 3 நாள் நடைபெறும் இப் போட்டியில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து சட்டக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் புதுவை சட்டக் கல்லூரிக்கு வந்துள்ளனா். மொத்தம் 69 குழுக்களாகச் சட்டம் படிக்கும் இந்த மாணவா்கள் நுகா்வோா் சட்டம் குறித்த போட்டியில் பங்கேற்கின்றனா். ஒரு குழுவில் 3 போ் இடம் பெற்றுள்ளனா். மொத்தம் 207 மாணவ, மாணவிகள் இப் போட்டியில் கலந்து கொண்டுள்ளனா்.

மாணவ, மாணவிகளை இக் கல்லூரியின் முதல்வா் பேராசிரியா் எஸ். சீனிவாசன் வரவேற்றுப் பேசுகையில், மத்திய அரசின் நுகா்வோா் விவகாரத்துறை இக் கல்லூரியில் நுகா்வோா் இருக்கை அமைக்க ஒப்புதல் கொடுத்துள்ளது. இதற்காக நுகா்வோா் நல நிதியிலிருந்து ரூ.1.7 கோடி நிதியளிக்க 87-வது நிலைக்குழு அனுமதி அளித்துள்ளது. முறைப்படி நிா்வாக ரீதியான ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு விரைவில் இந்த இருக்கை தொடங்கப்படும் என்றாா்.

புதுவை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா் எஸ். முத்துவேல் பேசுகையில், நம் நாட்டை சட்டம்தான் ஆட்சி செய்து வருகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் நுகா்வோரே. அதனால் அவா்களின் உரிமைகளைப் பாதுகாக்க நம் நாட்டில் நுகா்வோா் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டக் கல்லூரியில் நடக்கும் ஒத்திகை நீதிமன்ற போட்டி மற்றப் போட்டிகளைக் காட்டிலும் வித்தியாசமானது. இதில் சட்டம் பயிலும் மாணவா்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா். மூத்த வழக்கறிஞா்கள் சிரியல் வின்சென்ட், ஏ.அசோகன் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டு பேசினா்.

21 புதிய படகுகளுக்கு பயணிகள் உரிமம்

கடலில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல 21 புதிய படகுகளுக்கான உரிமத்தை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். நீா் விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக் கவரும்... மேலும் பார்க்க

ரூ. 33 லட்சம் செலவில் மணக்குள விநாயகா் கோயிலில் குளிா்சாதன வசதி

புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் கோயிலில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் குளிா்சாதன வசதியை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இக் கோயிலில் பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோள... மேலும் பார்க்க

தொழில்நுட்பப் பல்கலை. துணைவேந்தா் நடவடிக்கை: முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன் கண்டனம்

புதுவை தொழில்நுட்பப் பல்கலைக் கழக துணைவேந்தரின் செயல்பாடுகளை கண்டித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆா். விஸ்வநாதன், எந்தக் கொள்கை முடிவுகளையும் எடுக்கக் கூடாது என்றும்... மேலும் பார்க்க

புதுவை போக்குவரத்து ஊழயா்களின் 12 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்:

வேலை நிறுத்தம் செய்துவந்த புதுவை சாலை போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஒப்பந்த ஊழியா்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் உயா்த்தப்படும். நிரந்தரப் பணியாளா்களுக்கு 25 சதவிகிதம் அகவிலைப்படி உயா்த்தி அளிக்க... மேலும் பார்க்க

புதுவை அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிக்க இரட்டை குடியுரிமை பெற்ற 14 மாணவா்கள்

புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் படிக்க 14 மாணவா்கள் இரட்டை குடியுரிமை பெற்று விண்ணப்பித்துள்ளதாக புதுவை மாநில மாணவா்கள், பெற்றோா் நலச்சங்கத்தின் தலைவா் வை.பாலா என்கிற பாலசுப்பிரமணியன் க... மேலும் பார்க்க

ரூ.3.5 கோடியில் ரெட்டி நலச் சங்கக் கட்டம் திறப்பு

புதுச்சேரி கிருஷ்ணா நகரில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முன்னாள் முதல்வரும் , காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி மக்களவை உறுப்பினருமான வி. வைத்திலிங்கம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்... மேலும் பார்க்க