செய்திகள் :

பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ. 54 லட்சம் மோசடி

post image

அமெரிக்க நிறுவனத்தின் பெயரில், இந்திய பொதுப்பணித் துறை நிறுவனத்திடம் மோசடியில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகர் லிமிடெட் நிறுவனம் (HAL), முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி உபகரணங்கள் உற்பத்தியாளராக இருந்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் போர் ஜெட் விமானங்களை முடிக்கத் தேவையான உபகரணங்களை, இந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்.

இதனிடையே, விமானத்தின் பாகங்களை வாங்கும் முயற்சியாக அமெரிக்காவைச் சேர்ந்த பிஎஸ் இன்ஜினியரிங் இன்க் (PS Engineering Inc) நிறுவனத்துடன் கடந்தாண்டு மே மாதம் எச்ஏஎல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக மின்னஞ்சலிலும் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இதையும் படிக்க:ஜெர்மனியைவிட இந்தியாவில் ரயில் தடங்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

இந்த நிலையில், விமான பாகங்களுக்கான தொகையை செலுத்துமாறு பிஎஸ் நிறுவனத்தின் பெயரில், எச்ஏஎல்லுக்கு மோசடி கும்பல் ஒன்று மின்னஞ்சல் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, மோசடி கும்பல் என அறியாமல், 63,405 டாலர் (ரூ. 54.8 லட்சம்) தொகையை எச்ஏஎல் அளித்தது.

இதன்பின்னர்தான், மோசடி கும்பலின் மின்னஞ்சல் முகவரியான jlane@ps-enginering.com என்பதில் ஓர் எழுத்து (e) மட்டும் விடுபட்டிருப்பது தெரிந்து, தாம் மோசடிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை எச்ஏஎல் நிறுவனம் அறிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, சைபர் குற்றவியல் காவல்துறையிடம் எச்ஏஎல் புகார் அளித்துள்ளது.

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது! -ராகுல் காந்தி

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆத... மேலும் பார்க்க

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை: மத்திய சுகாதார அமைச்சா் தகவல்

பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் 68 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 75.81 சதவீதம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் மத்திய சுகாதா... மேலும் பார்க்க

காஷ்மீா் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை -ஜெய்சங்கா்

காஷ்மீா் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா.சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா். இதுதொடா்பாக தில்லியில் நடைபெறும... மேலும் பார்க்க

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த 2 மாதங்களில் கையொப்பம்: நியூஸி. பிரதமா் நம்பிக்கை

இந்தியாவுடன் அடுத்த 2 மாதங்களில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆவலுடன் இருப்பதாக நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா். நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்ட... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: லாலு இன்று ஆஜராக அழைப்பாணை

ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கு தொடா்பான விசாரணைக்காக பிகாா் முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி, அவரின் மகனும் பிகாா் எம்எல்ஏ-வுமான தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோா் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்... மேலும் பார்க்க

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை -ராகுல் குற்றச்சாட்டு

‘ஜனநாயக நடைமுறைகளின்படி மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி அளிக்கப்பட வேண்டும். ஆனால், ‘புதிய இந்தியா’வில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்... மேலும் பார்க்க