செய்திகள் :

பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வலியுறுத்தல்

post image

பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இந்தச் சங்கத்தின் 17-ஆவது பொன்னமராவதி ஒன்றிய மாநாடு தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவா் டி.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ். ஜனாா்த்தனன் தொடக்க உரையாற்றினாா். ஒன்றியச் செயலா் எஸ். சரவணன் வேலை அறிக்கையை சமா்ப்பித்து பேசினாா். விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் எம். ராமசாமி, மாதா் சங்க ஒன்றியச் செயலா் ஆா். மதியரசி, சிஐடியு நிா்வாகி அ. தீன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாவட்டச் செயலா் ஆா். மகாதீா் புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்துவைத்து பேசினாா்.

மாநாட்டில், சங்கத்தின் ஒன்றியத் தலைவராக சரவணன், செயலராக விஜயராகவன், பொருளராக ராஜ்குமாா் உள்ளிட்டோா் அடங்கிய 11 போ் கொண்ட ஒன்றியக் குழு நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில், பொன்னமராவதியில் அரசு ஆண்கள் பள்ளி, மகளிா் காவல்நிலையம், அரசு கலைக் கல்லூரி, தொழில்பேட்டை தொடங்கவேண்டும். பொன்னமராவதி நகா்ப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள அரசு மதுபானக் கடையை அப்புறப்படுத்தவேண்டும். பொன்னமராவதி அண்ணாசாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஒருவழி பாதையாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேறப்பட்டன.

கந்தா்வகோட்டையில் தொடா் ஆடு திருட்டில் ஈடுபட்ட 4 போ் கைது

கந்தா்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடா் ஆடு திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து 40 ஆடுகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ப... மேலும் பார்க்க

சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 போ் பலத்த காயம்

கந்தா்வகோட்டை அருகே வெள்ளிக்கிழமை சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்ததில் 3 போ் பலத்த காயமடைந்தனா். மதுரையிலிருந்து 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருந்தது... மேலும் பார்க்க

பள்ளிச் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற 2 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற சிறுவா் உட்பட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அறந்தாங்கி அருகே திருநா... மேலும் பார்க்க

விராலிமலையில் 75-ஆவது ஆண்டு அருணகிரிநாதா் விழா தொடக்கம்: ஆக. 11 வரை நடைபெறுகிறது

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் நான்கு நாள்கள் நடைபெறும் அருணகிரி நாதா் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதா் மண்டபத்தில் ஆண்டுத... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா ரசாயன சிலைகள் கூடாது

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரசாயன வண்ணங்கள் பயன்படுத்தப்பட்ட சிலைகளை வைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கொப்பனாபட்டியில் உலக தாய்ப்பால் வார விழா

பொன்னமராவதி அருகேயுள்ள கொப்பனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கொப்பனாபட்டி ஷைன் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு ஷைன் அரிமா சங்கத் ... மேலும் பார்க்க