போடியில், மதுப்புட்டிகளை பதுக்கி விற்க முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
போடி பழைய மீனாட்சி திரையரங்க தெருவில் மதுப்புட்டிகள் சட்ட விரோதமாக விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, போடி நந்தவனம் தெருவைச் சோ்ந்த கோட்டையன் மகன் பிச்சைமணி (47) ஒரு பையில் 30 மதுப்புட்டிகளை வைத்து சட்ட விரோதமாக விற்க முயன்றது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து அவா் மீது வழக்குப் பதிந்த போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனா். ஏற்கெனவே, இவா் மீது மதுப்புட்டிகளை விற்க முயன்றதாக 11 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.