செய்திகள் :

மதுபோதையில் 17 வயது சிறுவன் வல்லுறவு: படுகாயங்களுடன் குழந்தை கவலைக்கிடம்!

post image

மத்தியப் பிரதேசத்தில் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 5 வயது சிறுமி உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் பெண்ணுறுப்பில் 28 தையல்கள் போட வேண்டும் என்றும் கொலோஸ்டமி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஷிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது குழந்தை, கடந்த பிப். 23ஆம் தேதி காணாமல் போனது. உறவினர்கள் இரண்டு மணிநேரம் தேடிய பிறகு, அருகிலுள்ள வீட்டின் மொட்டை மாடியில் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டது.

குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.

இதையும் படிக்க : புணே பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது!

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது:

”குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தபோது, குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் மதுபோதையில் இருந்துள்ளார். இந்த சம்பவத்தின்போது, குழந்தையின் தலையை சுவற்றில் பலமுறை மோதவைத்துள்ளார்.

தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடல்கள், பெண்ணுறுப்பு பகுதிகளில் பல வெட்டு காயங்களும் கடித்ததற்கான காயங்களும் உள்ளன.

குழந்தை இன்னும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. கண்விழித்தாலும் யாருடனும் எதுவும் பேசவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சிறுவனை சாலையில் நிற்கவைத்து சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விரைவு நீதிமன்றம் அமைத்து குற்றவாளிக்கு உடனடியாக தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவா வரும் சுற்றுலா பயணிகள் குறைந்ததற்கு இட்லி, சாம்பார் தான் காரணம்!

நமது நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கைக் குறைந்ததற்கு இட்லி, சாம்பார், வடா பாவ் மற்றும் உக்ரைன் போர்தான் காரணம் என்று பாஜக எம்எல்ஏ கூறியிருக்கிறார். மேலும் பார்க்க

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் சூப்பாக்கிச் சூடு; யாருக்கும் காயம் இல்லை

இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மைதேயி மத வழிபாட்டு தலம் அருகிலுள்ள மலைகளில் இருந்து கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மைதேயின் புனிதத் தலமான கோங்பா மருவுக்கு பக... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதியை சுத்தம் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜாமா மசூதியை சுத்தம் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பலில் உள்ள ஜாமா மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்... மேலும் பார்க்க

பிகாரின் அடுத்த முதல்வரை மக்கள் முடிவு செய்வர்: ராப்ரி தேவி

தேஜஸ்வி பிகாரின் அடுத்த முதல்வரா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று அவரின் தாயாரும் பிகாா் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாட்னாவில் வெள்ளிக்கிழமை செய்தியாள... மேலும் பார்க்க

இயர்ஃபோன் பயன்படுத்தலாம்? ஆனால்..

இயர்ஃபோன், ஹெட்ஃபோன் போன்றவற்றை அதிக நேரம் தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்து என்று எத்தனையோ பேர் சொல்லியிருப்பார்கள், அதனை மத்திய சுகாதாரத் துறையே தற்போது எச்சரிக்கையாக வெளியிட்டிருக்கிறது.காது மற்றும் ... மேலும் பார்க்க

கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷியாவைச் சேர்ந்த 4 பேர் மீட்பு

கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷியாவைச் சேர்ந்த 4 பேர் பத்திரமாக மீட்டகப்பட்டனர். வடக்கு கோவாவில் உள்ள மேன்டிரம் கடற்கரையில் ரஷிய நாட்டினர் வியாழக்கிழமை பிற்பகல் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது தி... மேலும் பார்க்க