செய்திகள் :

``மத சட்டங்களால், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தை மீற முடியாது..'' - உச்ச நீதிமன்றம்

post image
குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டத்தை எந்தவொரு தனிப்பட்ட சட்டமும் மீற முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் சட்டப்படி பெண்களின் திருமண வயது 18, ஆண்களின் திருமண வயது 21. இதில், பெண்களின் வயதையும் ஆண்களின் வயதைப் போலவே 21-ஆக உயர்த்த 2021-ல் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோதும் இன்னும் அது நடைமுறைக்குக் கொண்டுவரப்படாமல் பரிசீலனையிலேயே இருக்கிறது.

குழந்தைத் திருமணம் மாதிரி படம்

அதனால், தற்போது நடைமுறையில் இருக்கும் குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டம் (PCMA) 2006-ன்படி, பெண்ணுக்கு 18 வயதுக்குள்ளும், ஆணுக்கு 21 வயதுக்குள்ளும் திருமணம் செய்துவைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். சட்டப்படி அத்தகைய திருமணம் செல்லாது. இவ்வாறான சட்டம் இருந்தபோதிலும், குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில் நடந்தவண்ணமே இருக்கிறது.

UNICEF-ன் 2021 அறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் 18 வயதுக்குட்பட்ட 1.5 மில்லியன் பெண்கள், குழந்தைத் திருமண பாதிப்புக்குள்ளாவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் குழந்தைத் திருமணங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறிருக்க, குழந்தைத் திருமணங்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்துமாறு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டிருந்த பொதுநல மனு, தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்றம்

அப்போது, மனுவை விசாரித்த நீதிமன்ற அமர்வு தனது தீர்ப்பில், ``எந்தவொரு மதத்தின் தனிப்பட்ட சட்டங்களும், குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டத்தை மீற முடியாது. குழந்தைத் திருமணங்கள், தங்களின் துணையைத் தேர்ந்தெடுக்கும் தனிநபர் உரிமையை மீறுகிறது. அதுமட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் உடலளவிலும், மனதளவிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டம் என்பது ஒரு சமூகச் சட்டம். இந்தப் பரந்த சமூகக் கட்டமைப்பில் அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சியால் மட்டுமே இந்த சட்டம் வெற்றி பெரும்.

அதோடு, குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கப்படுவதைக் காட்டிலும் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதிலும், சிறார்களின் பாதுகாப்பிலும் அதிகாரிகள் முதன்மையாகக் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், குழந்தைத் திருமண குற்றவாளிகளுக்கு அளிக்கும் தண்டனை, சம்பந்தப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை நாங்கள் அறிவோம். அதேசமயம், குழந்தை திருமணம் செய்தவர்கள் மீது வழக்கு தொடரக்கூடாது என்று நாங்கள் சொல்வதாக இதனைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

குழந்தைத் திருமணம் (Representational Image)

வழக்கு தொடருவதைக் காட்டிலும், குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதில் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். இந்தச் சட்டத்தில் இருக்கும் தண்டனை விதிகள் முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் சட்ட விளைவுகள் குறித்த பரவலான விழிப்புணர்வு மற்றும் கல்வி அவசியம்" என்று வலியுறுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

`திருவண்ணாமலை கோயிலுக்காக மாஸ்டர் பிளான் திட்டங்கள்’ - தீபத்திருவிழா ஆய்வில் உதயநிதி உத்தரவாதம்

திருவண்ணாமலை மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை வருகைத் தந்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு வழிநெடுகிலும் தி.மு.க-வினர் வரவேற்பு அளித்தனர்.இதையடுத்து, ... மேலும் பார்க்க

Aavin: `புதிய வகைப் பாலை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது!' - ஆவின் விளக்கம்

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கிரீன் மேஜிக் எனும் பச்சை நிற பாக்கெட் பாலை, கிரீன் மேஜிக் பிளஸ் எனப் பெயர் மாற்றம் செய்து, லிட்டருக்கு ரூ. 11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளை எனவும், ஆவின் உடனடியாக இதை... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: `ஆளுநருக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை' - ஆளுநரின் ஆலோசகர் விளக்கம்

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடே, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தின... மேலும் பார்க்க

கோவை உக்கடம் குளத்தில் `மிதக்கும் சோலார்' மின் உற்பத்தி நிலையம்.. | Photo Album

சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்கண்காணிப்பு காமிராக்கள்சூரிய மின்சக்தி (சோலார்) தகடுகள்சூரிய மின்சக்தி (... மேலும் பார்க்க

ஜோலார்பேட்டை: 150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம்.. குடிநீர், கழிவறை வசதியின்றி திண்டாடும் அவலம்!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை செல்லும் முக்கிய ரயில்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை கடந்துதான் செல்லும். தி... மேலும் பார்க்க

விருதுநகர்: `நகராட்சியோடு இணைக்கத் தேவையில்லை’ - கூரைக்கூண்டு கிராம மக்கள் போராட்டத்தின் பின்னணி

விருதுநகர் மாவட்டம் , கூரைக்கூண்டு ஊராட்சியை விருதுநகர் நகராட்சியுடன் இணைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகி அந்தப் பகுதியை போராட்ட களமாய் மாற்றியது. விருதுநகர் நகராட்சியை, சிறப்பு நிலை நகராட்சியாகதரம் உ... மேலும் பார்க்க