செய்திகள் :

மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்; கிராம மக்களிடம் சிக்கிய மின் வாரிய ஊழியர் கைது!

post image

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாய் பேச முடியாத மனநலம் பாதிக்கப்பட்டவர். அப்பகுதியை சேர்ந்த தம்பதியினர் அந்த பெண்ணை தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வளர்ப்பு பெற்றோர் இருவரும் வெளியில் சென்ற நிலையில், அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் ராமநாதபுரம் நகர் வடக்கு மின் வாரியத்தில் கேங் மேனாக பணிபுரியும் சூரன்கோட்டை களத்தாவூர் பகுதியைச் சேர்ந்த இளையராஜா (36) என்பவர் அப்பெண் தனிமையில் இருப்பதை நோட்டமிட்டதுடன், மனம் நலம் பாதித்த அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார்.

பாலியல் சீண்டல் செய்த இளையராஜா
பாலியல் சீண்டல்

இதனை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் இளையராஜாவை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். இதனால் அவர்கள் கூச்சலிடவே கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இளையராஜாவை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவரை ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் வளர்ப்பு பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

`உதயநிதியைக் கூப்பிடுவேன்..!' - மெரினாவில் வாக்குவாதம் செய்த நபர்... போலீஸ் விசாரணை!

சென்னையில் நள்ளிரவு நேரத்தில் போலீஸார் ரோந்து பணி, வாகனச் சோதனையில் ஈடுபடுவது உண்டு. சம்பவத்தன்று போலீஸார், மெரினா சர்வீஸ் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்தச் சாலையில் ... மேலும் பார்க்க

டேட்டிங் ஆப்பில் சிக்கும் இளைஞர்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல்... விசாரணையில் அம்பலம்!

டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகி திருமணம் செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகும் பெண்களிடம் மோசடி செய்வது போன்ற சம்பவங்களும் நடக்கிறது. ஆனால் மும... மேலும் பார்க்க

ஒரே நாளில் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்... 17 வயது சிறுவன் கைது! - நடந்தது என்ன?

கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை செயல்பட்டுவரும் நிலையில், இந்த வ... மேலும் பார்க்க

சப் கலெக்டர் தற்கொலை விவகாரம்; லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டிய பஞ்சாயத்து தலைவி மீது வழக்கு!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மலையாலப்புழா பகுதியைச் சேர்ந்த நவீன் பாபு, கண்ணூர் மாவட்ட சப் கலெக்டராக பணிபுரிந்துவந்தார். அவரது மனைவி மஞ்சுஷா பத்தனம்திட்டா கோனி தாசில்தாராக பணிபுரிந்துவருகிறார்.... மேலும் பார்க்க

Lawrence Bishnoi: 700 துப்பாக்கிச்சூடு கொலையாளிகள்; சிறைக்குள்ளிருந்தபடியே கட்டுப்படுத்தும் லாரன்ஸ்!

அரசியல் தலைவர் பாபா சித்திக் கொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள பாந்த்ரா கிழக்கு பகுதியில் அவரைச் சுட்டு வீழ்த்திய நபர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற... மேலும் பார்க்க

கண் இமைக்கும் நேரத்தில் சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை; கதறிய தாய்... வால்பாறையில் அதிர்ச்சி!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. அங்குள்ள ஊசிமலை எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் புலம்பெயர் தொழிலாளி... மேலும் பார்க்க