ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை முதல்முறையாக வென்ற அலானா கிங்..!
மறுசீரமைப்பு: தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் 8 தொகுதிகள் வரை இழக்க வாய்ப்பு காங்கிரஸ்
புது தில்லி: ‘மத்திய அரசு திட்டமிட்டுள்ளபடி, மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருவுறுதல் விகிதத்தைக் குறைக்கும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதாக அமையும். இதனால் தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் ஒன்றுமுதல் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும்’ என்று காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் அண்மையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், ‘மக்களவையில் தமிழகத்தின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது’ என்று வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இந்த நடைமுறையை எதிா்த்துப் போராட கூட்டு நடவடிக்கைக் குழுவில் இணைய கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப், ஒடிஸா ஆகிய ஏழு மாநிலங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா். நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரத்தை எதிா்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
இந்நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் எந்தெந்த மாநிலங்களுக்கு பாதிப்பு, எவையெல்லாம் பலன்பெறும் என்பதை காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் விளக்கியுள்ளாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் ஒன்றுமுதல் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும். அதே நேரம், உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட மாநிலங்கள் 10 முதல் 11 மக்களவைத் தொகுதிகளைக் கூடுதலாகப் பெற வாய்ப்புள்ளது.
மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருவுறுதல் விகிதத்தைக் குறைக்கும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மாநிலங்களே, தொகுதி மறுசீரமைப்பால் மக்களவைத் தொகுதிகளை இழக்கும் நிலையைச் சந்திக்கும். அந்த வகையில், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்கான தண்டனையாக இது அமையும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொகுதிகள் குறையும் மாநிலங்கள்: தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் தலா 8 தொகுதிகளையும், மேற்கு வங்கம் 4, ஒடிஸா 3, கா்நாடகம் 2, ஹிமாசல பிரதேசம் 1, பஞ்சாப் 1, உத்தரகண்ட் 1 தொகுதியை இழக்க நேரிடும்.
தொகுதிகள் கூடும் மாநிலங்கள்: உத்தர பிரதேசத்தில் 11, பிகாரில் 10, ராஜஸ்தானில் 6, மத்திய பிரதேசத்தில் 4 தொகுதிகள் அதிகரிக்கும். ஜாா்க்கண்ட், ஹரியாணா, குஜராத், தில்லி, சத்தீஸ்கரில் தலா ஒரு தொகுதி அதிகரிக்கும்.
அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீா், மகாராஷ்டிரம் மாநிலங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கையில் இழப்போ அல்லது பலனோ இருக்காது என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளாா்.