செய்திகள் :

மலேசியாவில் மார்கோ ரூபியோவை சந்தித்த ஜெய்சங்கர்; வர்த்தக பேச்சுவார்த்தைக்கு பாசிட்டிவ் சிக்னல்?

post image

தற்போது மலேசியாவில் ஆசியான் உச்சி மாநாடு நடந்து வருகிறது.

இதில் இந்தியா சார்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார்.

இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப், பிரேசில் அதிபர் லூலா உள்ளிட்ட பல நாட்டு அதிபர்கள் கலந்து கொண்டுள்ளனர்... கலந்து கொள்கிறார்கள்.

ஜெய்சங்கர் - மார்கோ ரூபியோ
ஜெய்சங்கர் - மார்கோ ரூபியோ

சந்திப்பு

இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோவை இன்று சந்தித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மார்கோ ரூபியோ, 'இந்தியா உடனான உறவைக் கெடுத்து அமெரிக்கா பாகிஸ்தான் உடனான உறவை வலுப்படுத்தாது' என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தை தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், மார்கோ ரூபியோவின் இந்தப்‌ பேச்சு பாசிட்டிவ் சிக்னலைக் காட்டுகிறது.

நம்பலாம்!

ட்ரம்ப்பும் இந்திய பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து பாசிட்டிவாக பேசி வருகிறார்... இந்த உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை செய்து வருகிறார்.

நேற்று நடந்த அமெரிக்க - சீன வர்த்தக பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்துள்ளது. இதனால், சீனாவின் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் 100 சதவிகித வரி நீக்கப்பட்டிருக்கிறது.

முட்டி மோதிக்கொண்டிருந்த சீனா‌ உடனான பேச்சுவார்த்தையே நல்லபடியாக போய் கொண்டிருக்கும் பட்சத்தில், இந்தியா உடனான பேச்சுவார்த்தையும் நல்லபடியாகவே முடியும் என்று நம்பலாம்.

Delhi Blast: "அந்தக் காட்சிகள் உண்மையிலேயே இதயத்தை உடைக்கின்றன" - மு.க.ஸ்டாலின் அறிக்கை!

டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைகள் முடுக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் தேசிய புலனாய்வு ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: மும்பை, சென்னை, கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு; நிலைமையை ஆராயும் பிரதமர் மோடி!

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த சக்திவாய்ந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பிற நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல... மேலும் பார்க்க

Delhi Blast: 8 பேர் பலி; மோடி ஆய்வு; நாடு முழுவதும் பதற்றம்! | Live

தமிழகத்தில் பலப்படுத்தப்படும் பாதுகாப்புதமிழகத்தில் பாதுகாப்பு சோதனைகள்"டெல்லி பாதுகாப்பில் அலட்சியம்" - அரவிந்த் கெஜ்ரிவால் கவலைமுன்னாள் Delhi முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "ரெட் ஃபோர்ட் அருகே வெட... மேலும் பார்க்க

TN -ல் SIR -ஐ எதிர்க்கும் BJP, ஆதரித்து வழக்கு தொடுத்த ADMK | ECI EPS STALIN TVK | Imperfect Show

* SIR: "வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம்... அச்சமாக இருக்கிறது" - முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணம்* “SIR படிவங்களை அனைத்து வீடுகளுக்கும் வழங்க 8 நாட்களே போதும்” -எடப்பாடி பழனிசாமி* CAA-NRC-ஐ ஆதரித்த அ... மேலும் பார்க்க

``அதிமுக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை; கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறார்கள்" - ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் டி எம் எஸ் எஸ் பள்ளியில் காணொளி காட்சி மூலம் அன்புச் சோலை திட்டத்தை (முதியோர் பராமரிப்பு மையத்தை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் ஐ. பெரியசாமி, திண்... மேலும் பார்க்க