செய்திகள் :

மலேசியாவில் மார்கோ ரூபியோவை சந்தித்த ஜெய்சங்கர்; வர்த்தக பேச்சுவார்த்தைக்கு பாசிட்டிவ் சிக்னல்?

post image

தற்போது மலேசியாவில் ஆசியான் உச்சி மாநாடு நடந்து வருகிறது.

இதில் இந்தியா சார்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார்.

இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப், பிரேசில் அதிபர் லூலா உள்ளிட்ட பல நாட்டு அதிபர்கள் கலந்து கொண்டுள்ளனர்... கலந்து கொள்கிறார்கள்.

ஜெய்சங்கர் - மார்கோ ரூபியோ
ஜெய்சங்கர் - மார்கோ ரூபியோ

சந்திப்பு

இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோவை இன்று சந்தித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மார்கோ ரூபியோ, 'இந்தியா உடனான உறவைக் கெடுத்து அமெரிக்கா பாகிஸ்தான் உடனான உறவை வலுப்படுத்தாது' என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தை தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், மார்கோ ரூபியோவின் இந்தப்‌ பேச்சு பாசிட்டிவ் சிக்னலைக் காட்டுகிறது.

நம்பலாம்!

ட்ரம்ப்பும் இந்திய பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து பாசிட்டிவாக பேசி வருகிறார்... இந்த உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை செய்து வருகிறார்.

நேற்று நடந்த அமெரிக்க - சீன வர்த்தக பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்துள்ளது. இதனால், சீனாவின் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் 100 சதவிகித வரி நீக்கப்பட்டிருக்கிறது.

முட்டி மோதிக்கொண்டிருந்த சீனா‌ உடனான பேச்சுவார்த்தையே நல்லபடியாக போய் கொண்டிருக்கும் பட்சத்தில், இந்தியா உடனான பேச்சுவார்த்தையும் நல்லபடியாகவே முடியும் என்று நம்பலாம்.

`மீண்டும் திமுகவுக்கே வாய்ப்பு; விஜய் செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியது!' - ஓபிஎஸ்

சிவகங்கை மாவட்டம் காளையர் கோவிலில் விடுதலைப் போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குரு பூஜையில் கலந்துகொண்ட முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுத் தலைவருமான ஓ பன்னீர் செல்வம் மருது பாண... மேலும் பார்க்க

`என்னை மன்னிச்சிருங்க; சூழல் சரியில்ல...' - கரூர் குடும்பத்தினரிடம் விஜய் உருக்கம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை மாமல்லபுரம் வரவழைத்து விஜய் ஆறுதல் கூறி வருகிறார். இந்தச் சந்திப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்ட... மேலும் பார்க்க

பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கு தடை! – புதுச்சேரி தொழிலாளர் துறை உத்தரவு

புதுச்சேரி தொழிலாளர் துறையின் செயலர் ஸ்மித்தா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 66, துணைப் பிரிவுகள் (1) (b) விதிமுறையின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களின்படி, பு... மேலும் பார்க்க

"மாநாடு முடியற வரைக்கும் அந்தக் கட்சியின் தொண்டனாவே மாறிடுவேன்" - 'பந்தல்' சிவா பேட்டி

இன்னும் சில மாதங்களே இருக்கின்றன 2026 சட்டசபைத் தேர்தலுக்கு. தேர்தல் வந்தால் மாநாடு, பொதுக்கூட்டம், பிரசாரம் என அரசியல் கட்சிகள் பிசியாகி விடுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் கட்சிகளுடன் சேர்ந்து இன்னொரு மு... மேலும் பார்க்க

'15 ஆண்டுகளாக உங்கள் பின்னால் அணிவகுத்தோம்; எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா' - பரபரக்கும் போஸ்டர்

கடந்த செப்டம்பர் மாதம் 27 - ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், அவர்களின் குடும்பத்தினரை இன்று சென்னை... மேலும் பார்க்க

"தவெக எனும் புதுக்கட்சியை திமுக வளர விடாது" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

"திமுகவுக்கு டெல்டா மாவட்ட மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். எழுதி வைத்து கொள்ளுங்கள், தமிழகம் முழுதும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும... மேலும் பார்க்க