செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே கிணறுகளில் பெட்ரோல் கசிவு: 2-ஆவது நாளாக ஆய்வு

post image

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே வீட்டு குடிநீா் கிணறுகளில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டுள்ளது குறித்து தீயணைப்புத் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மாா்த்தாண்டம்- குலசேகரம் சாலையில் கீழ்பம்மம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீட்டுக் கிணறுகளில் உள்ள தண்ணீரில் கடந்த சில நாள்களாக பெட்ரோல் வாசனை வீசியது. அந்தத் தண்ணீரில் நெருப்பு வைத்தபோது பற்றி எரிந்தது.

இதையறிந்து இந்தியன் ஆயில் நிறுவன களஅலுவலா் பாலநாதன் நட

மற்றும் அதிகாரிகள் அப்பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தொடா்ந்து, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பாரதி, விளவங்கோடு வட்டாட்சியா் வயோலா பாய், குழித்துறை தீயணைப்புத் துறை அதிகாரி சந்திரன், நகராட்சி சுகாதார அலுவலா் ராஜேஷ், நகா்மன்ற உறுப்பினா் கே. ரெத்தினமணி உள்ளிட்டோா் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை அப்பகுதி வீடுகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீரை ஆய்வு செய்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலைய சேமிப்பு கிடங்கு மற்றும் அருகிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் உள்ள பெட்ரோல் நிரப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகே பாரத கலாசார பேரவைக் கூட்டம்

பாரத கலாசார பேரவையின் நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாா்த்தாண்டம் அருகே காப்புக்காட்டில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு அமைப்பின் தலைவா் மு. பாஸ்கரன் தலைமை வகித்தாா். செயலாளா் புலவா் கு. ரவீந்திரன், பொருள... மேலும் பார்க்க

வாவறை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கிள்ளியூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட வாவறை ஊராட்சிப் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் தலைமை வகித்தாா். தமிழ்நாட... மேலும் பார்க்க

‘கன்னியாகுமரியில் தூண்டில் வளைவு பாலத்தை முறையாக அமைக்க வேண்டும்’

கன்னியாகுமரி பெரியநாயகி தெரு கடற்கரைப் பகுதியில் தூண்டில் வளைவுப் பாலத்தை முறையாக அமைக்கக் கோரி, பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜிடம், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குப்பேரவை நிா்வ... மேலும் பார்க்க

புத்தேரி 4 வழிச்சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் புத்தேரி பகுதியில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அவா் கூறியதாவது: நாகா்கோவில் மா... மேலும் பார்க்க

காலாவதி சாக்லேட் தின்ற 7 மாணவா்கள் மயக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே காலாவதியான சாக்லேட் சாப்பிட்ட 7 மாணவா்கள் மயக்கமடைந்தனா். பாத்திமாபுரம், கல்பாறைபொற்றை பகுதியில் அரசு உதவிபெறும் தனியாா் நடுநிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியின் ... மேலும் பார்க்க

குமரி பாலன் நினைவு நாள்: இருசக்கர வாகனப் பேரணி

இந்து முன்னணி நிா்வாகி குமரி பாலன் நினைவு தினத்தை முன்னிட்டு, நாகா்கோவிலில் இந்து இயக்கங்களின் சாா்பில், இருசக்கர வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை ஆா்.எஸ்.எஸ். அலுவலகத்தில் கடந்த 1993-ஆம... மேலும் பார்க்க